Saturday, January 09, 2010

எனக்கு நானே கடவுள்!!!

கவிதையாக இதை எழுத வேண்டும் என்று ஆசை எனக்கு..ஆனால் பதிவாக எழுதுகிறேன்...

காலைக் காட்சிகள் எனக்கு மாறிவிட்டன..பறவைகளின் சத்தம், மூடப்பட்ட கடை ஷட்டர்களின் முன் இருக்கும் பால் பாக்கெட்டுகள், மார்கழி கோலங்கள் போடும் அம்மாக்கள், பரவலாக 30 - 40 வயது உள்ளவர்களின் காலை வாக்கிங், டீக்கடைகளில் கூட்டம், தூசி பறக்காத ரோடுகள், ரோடுகளில் மிகவும் குறைந்த வண்டிகள் நன்றாக தான் இருக்கிறது.. காலையில் 6 மணிக்கு எழுந்து 7.20க்க்கு அலுவலக பஸ்ஸைப் பிடிப்பதற்கு....ஆனால் மாலையில் வீடு வரும் போது மணி 8 ஆகி விடுகிறது என்பதை நினைத்தால் தான் கவலை..மீதம் இருக்கும் 3 மணி நேரத்தில் நான் செய்ய வேண்டியவை ஏராளம் ஏராளம்...

வாரம் ஒரு முறை வலைத்தளத்தில் பதிய வேண்டும் என்ற 2010 புத்தாண்டு உறுதிமொழிக்குக் கரு யோசித்தல்; காதல் வாழ்க்கை; அதற்கு குடும்பத்தில் ஒத்துழைப்பு பெறுதல்; தினமும் தினமணி, டைம்ஸ் ஆப் இந்தியா என்று இரு செய்திதாள் வாசித்தல்; உடற்பயிற்சி; நாங்கள் நடத்தி வரும் அறக்கட்டளைக்கான வேலைகள்; அதற்கு ஒரு வலைத்தளம் உருவாக்குதல்; அடுத்து அமெரிக்கா எப்படி செல்வது என்று யோசிப்பது (அ) புதிய தொழில் ஒன்றை நாமே எப்படி ஆரம்பிப்பது; அலுவலகப் பணிகள்; வலையில் மேய்ந்து புதிய விடயங்கள் படித்தல் / அறிவு சேர்த்தல்; பங்குச் சந்தை; வரவு செலவு கணக்கு ; டிவி; நல்ல சினிமா தரவிறக்கம் பண்ணி பார்ப்பது (Schindler's list ரொம்ப நாளாகக் இருக்கிறது முழுதாகப் பார்க்காமல்); ஆனந்த விகடன், ஞானி மற்றும் "five point someone", "one night at the call center" and "zen and the art of motorcycle" படித்தல்; இவை படித்த அப்புறம் அருந்ததி ராயின் நூல்கள், "the white tiger" படிக்க வேண்டும்...ஆப்பிள் ஆரஞ்சு மற்றும் பிற மளிகை சாமான்கள் வாங்குதல்; துணிகளைத் துவைத்தல்; இஸ்திரி பண்ணுதல்; வீட்டை ஒழுங்குப்படுத்துதல்; இரயில் டிக்கெட் பதிவு செய்வது...

இவ்வளவும் செய்வதற்கு எனக்கு இருப்பது, வார நாட்களில் 3 மணி நேரம் (5*3 = 15) + சனி(24) + ஞாயிறு(24) = 58 மணி நேரம்.. கண்டிப்பாக நிறைய ஊக்கம் தேவைப்படுகிறது....நான் என்னையே கேட்டுக் கொள்கிறேன்.. நிறைய ஊக்கம் வேண்டுமென்று. இதை கடவுளிடம் கேட்பதை அவரும் விரும்ப மாட்டார். எனக்கு நானே கடவுள்!!!