Monday, May 18, 2009

நாம் மனிதர்களா?




முடிந்து விட்டது என்று தான் நினைக்கிறேன். ஈழத்தமிழன் தன் கனவை கனவாகவே தான் வைத்திருக்க வேண்டும் போலும். பெருபான்மை தமிழ் நாட்டு தமிழர்களிடம் மானம், சொரணை
, உணர்வு, பற்று எதுவும் கிடையாது என்பது தெரிந்தது தான் என்றாலும் மீண்டும் 8 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்ற பின் அது ஊர்ஜிதபடுத்தப் பட்டுள்ளது.

இப்படி போன்ற ஒரு இரத்த களறி நடந்து முடிந்து இருக்கும் போது, கலைஞர் அலைவரிசையில் தலைப்பு செய்தி "கலைஞர் டெல்லி பயணம்! சோனியாவுடன் பேச்சு வார்த்தை". இதை நான் கலைஞரைக் குறையாகச் சொல்லவில்லை. இதே இடத்தில் யார் இருந்தாலும் இதை தான் செய்து இருப்பார்கள். இவர்களுக்கெல்லாம் அரசியல் செய்ய ஒரு பிரச்சினை வேண்டும். இந்த தடவை அது ஈழமாகி விட்டது. புத்திசாலிகள் தமிழ்நாட்டில் உள்ளனர் அதனால் தான், இவர்கள் யாரையும் நம்பாமல், யார் அதிகமாக பணம் கொடுத்தார்களோ, அவர்களுக்கு தான் எங்கள் ஓட்டு!!. தமிழ் நாட்டில் தான் ஓட்டு வாங்கப் படுகிறதே!..

நண்பர்களே! நன் தலைவர்களிடம் மனிதம் இருக்கிறதா ஏன் நம்மிடம் இருக்கிறதா என்று சிறிது யோசியுங்கள் ஒரு பரிசோதனை செய்யலாம்..."படுகாயமடைந்த 25 ஆயிரம் தமிழர்கள் மருத்துவ பராமரிப்பு இல்லாமல் பரிதாப மரணம்" இது தேர்தல் நடந்த அதே நாளில் இலங்கையில் நடந்தது. ஆனால் நாம் ஒன்றும் செய்ய வில்லை. எப்பொழுதும் போல் உண்டு உறங்கி எழுந்து அந்த நாளைக் கழித்து விட்டோம். உங்களுக்கு செய்தி தெரியாமல் போகட்டும். ஆனால் தெரிந்து இருந்தால், அன்று ஓட்டு போட்டிருந்தால், அதுவும் காங்கிரஸ்க்கு ஓட்டு போட்டிருந்தால் நீங்கள் மனிதன் இல்லை.. மிருகம் தான். சரி காங்கிரஸ் தான் இந்த போரை நடத்துகின்றது என்பதற்கு தான் என்ன ஆதாரம் என்று நீங்கள் கேட்டால், ஒரு சின்ன மாற்றம்! நீங்கள் மனிதன் தான் ஆனால், கடைந்தெடுத்த முட்டாள்!

மன்னிக்கும் குணம் தான் மனித குணம் அது தொண்டர்களிடம் இருக்கிறதோ இல்லையோ,
தலைவர்களிடம் கண்டிப்பாக வேண்டும். ஆனால் நம் தலைவர்களிடத்தில் இருப்பது, பழி வாங்கும் குணம். குற்றம் செய்தவர்களை ம்ட்டுமல்ல, அவர்களைச் சார்ந்தவர்களையும். இவர்கள் மனிதர்களா? சரி விடுங்கள்!!

வேறென்ன சொல்ல? தோல்வியுற்றவர்களால் புலம்ப தான் முடியும். நியாயமாக இருப்பவர்கள் இந்த காலத்தில் தோல்வியை மட்டுமே பெரும்பான்மையான தடவைகள் சுவைக்க முடியும். அதனால் தான் உலகெங்கும் புலம்பல்களும் சோகங்களும் மட்டுமே நிறைந்து இருக்கின்றன. இன்று இந்த புலம்பல் போதும். இன்னும் வெற்றியைப் பார்க்க நிறைய
சோகங்கள் உள்ளன... அதற்கு மிச்சம் வைக்கிறேன்...காத்திருக்கிறேன் வெற்றிக்காக!! ஆனால் வெற்றி நிச்சயம்..