Thursday, July 05, 2007

ஒரு வருடம் முடிந்தது..

ஆம், நான் அமெரிக்கா வந்து இந்த மாதத்தோடு ஒரு வருடம் முடிந்தது. இந்த ஒரு வருடத்தில் நடந்தது பற்றித் தான் இந்த குறிப்பு. (blog ன் தமிழ் வார்த்தை என்ன? எனக்கு தெரியவில்லை)

உடனே தோன்றுவது, இந்தியாவில் இருந்த வரைத் தமிழில் எவ்வாறு blog செய்வது என்றுத் தெரியாமல் இருந்தது. அமெரிக்கா வந்து கற்றுக் கொண்டேன். என் சகப் பணியாளர்களும் தெரிந்து கொள்ள வகை செய்தேன்.

முதலில் பார்த்த இடங்கள் என்று சொல்லப் போனால், ப்ளோரிடா, மியாமி, நயகரா, சிகாகோ கூறலாம். ப்ளோரிடா பயணத்தை மறக்க முடியாது. universal studios, disney world, nasa அனைவரும் பார்க்க வேண்டிய ஒன்று. நயகராவைப் பார்த்து விட்டு, மனிதர்கள் சண்டை போடுவதையும், தங்களுக்குள்ளேயே ஏமாற்றிக் கொள்வதையும் பார்த்தால், சிரிப்பு தான் வருகிறது. அவ்வளவு பெரியது நயகரா. பார்த்த இன்னும் ஒன்று, சிவாஜி :). திரையரங்கம் சென்று பார்த்த வேறு படங்கள் : "வேட்டையாடு விளையாடு, போக்கிரி"

வேறு என்ன நடந்தது?

ஒரு கணிணி (laptop எப்படி சொல்வது), digital camera வாங்கினேன்.

என் நண்பன் நவநீ அமெரிக்காவிலிருந்து இந்தியா போய், மீண்டும் அமெரிக்கா வந்து விட்டான்.

என்னோடு 12265 2B யில் தங்கி இருந்த பாப்பு இந்தியா சென்று விட்டார்.

நான் ஒரு நிஸான் அல்டிமா வாங்கினேன். அமெரிக்காவில் ஓட்டுனர் உரிமம் கிடைத்து நன்றாக வண்டி செலுத்த கற்றுக் கொண்டேன்.

என்னுடன் கல்லூரியில் படித்த பாதி நண்பர்கள் அமெரிக்காவில் இருக்கின்றனர். அதில் இராஜாராம், நித்யா மற்றும் விஸ்வா போன்றவர்களை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.
என்னுடைய நண்பர்கள் நிறைய பேருக்கு கல்யாணம் நடந்தது அல்லது கல்யாணம் உறுதியானது. அவ்வளவு வயதாகி விட்டது :)


ஆர்குட் நன்கு பரிச்சயமானது. என்னுடைய ஆதர்ஷ் பள்ளி நண்பர்கள் நிறைய பேருடன் மீண்டும் தொடர்பு ஏற்பட்டது. குறிப்பிடத்தகுந்த பிற ஆர்குட் நண்பர்கள் : மிர்ச்சி சுசி, ஓ பக்கங்கள் ஞாநி..

நிறைய தோல்விகள் கிட்டியது. கடைசியாக கிடைத்தது, appraisal (தமிழ் வார்த்தை தெரியவில்லை) குறைந்தது. தோல்விகளில் இருந்து நிறைய தெரிந்து கொண்டேன். துன்பங்கள் வரும் போது தான், உண்மையான் நண்பர்கள் யார் என்று தெரிந்து கொள்ள முடிகிறது. ஆதலால் துன்பங்களும் நன்றே!! மேலும், பழைய நண்பர்கள் போனாலும் புதிய நண்பர்கள் கிடைத்தார்கள். :)

பார்த்துக் கற்றுக் கொண்டதை விட, அனுபவித்து நிறையவே கற்றேன். மனிதர்களை நன்றாக புரிந்து கொள்ளும் சந்தர்ப்பங்கள் நிறையவே கிடைத்தது. நூல்களில் படிப்பதை வாழ்க்கையில் அப்படியே செயல்படுத்துவது எவ்வளவு கடினம் என்பதை மிகத் தெளிவாக புரிந்தது.

அதோடு இன்னொன்றும் நன்றாகத் தெரிந்து கொண்டேன். துன்பங்கள் வரும் போது, அதைச் சரி பண்ணும் வழிகளும் எளிதாகத் தெரியத் தான் செய்கிறது. நமக்கு தேவையெல்லாம், துன்பங்களை எதிர் கொள்ளும் துணிவு தான். அதை அதிகரிக்க முயலுகிறேன்..

வரும் ஆகஸ்ட் மாதம் மீண்டும் இந்தியா செல்கிறேன். :)

மீண்டும் சென்னை, வேளச்சேரி...பார்ப்போம், அடுத்த வருடம் இந்தியா என்ன கற்றுத் தருகிறது என்று?