Saturday, November 24, 2007

வைகோவும் நெடுமாறனும் என்ன சாதித்தார்கள்?

அண்மையில் விடுதலை புலி தலைவர் தமிழ்ச்செல்வன் இறந்ததற்காக சென்னையில் இரங்கல் கூட்டம் / ஊர்வலம் ஒன்றைத் தலைமையேற்று நடத்த முடிவு செய்து இருந்தனர், வைகோவும் நெடுமாறனும். ஆனால் தமிழக அரசு அனுமதி மறுத்தது. ஏன் என்று தெரியவில்லை. ஏதோ ஒரு காரணம் இருக்கட்டும். அதை விடுங்கள். இதற்கு என்ன செய்து இருக்க வேண்டும் இருவரும்? இரங்கல் ஊர்வலத்திற்கு பதிலாக வேறு ஏதேனும் ஏற்பாடு செய்து இருக்க வேண்டும்.

அதை விட்டு விட்டு, நாங்கள் ஊர்வலம் தான் நடத்துவோம் என்று, தடையை மீறி நடத்த முற்பட்டனர். எதிர்பார்த்ததைப் போலவே, அவர்கள் கைது செய்யப் பட்டனர். ஊர்வலமும் நடக்கவில்லை. வைகோ மற்றும் நெடுமாறனின் இந்த செயல்களினால், யாருக்கு என்ன லாபம்?

1. மக்கள் யாரேனும் இவர்களின் இந்த செயலினால்,
தமிழ்ச்செல்வனை நினைத்து பார்த்தார்களா?
2. இலங்கையில் தான் இவர்களின்
இந்த முயற்சியினால், ஏதேனும் மாற்றம் வந்ததா?

ஆனால், எவ்வளவு நஷ்டம் என்று ஒரு பட்டியலே இடலாம்:
1. ஊர்வலத்தில் பங்கேற்ற அனைவரையும் கைது செய்யத் தேவையான வாகனங்களின் போக்குவரத்து செலவு
2. பந்தோபஸ்து செலவு
3. பொது மக்களுக்கு அன்றாட வாழ்க்கைக்கு ஏற்பட்ட இடையூறுகள்
4. சாலையில் ஏற்பட்ட பதட்டம்
5. தேவையில்லாத கைது மற்றும் சிறையடைப்பு
6. நீதிமன்றம் மற்றும் வழக்கறிஞர்களுக்கு ஜாமீன் வேலை.

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். முதிர்ந்த அரசியல்வாதிகளான இருவரும், இதற்கு பதிலாக போராட்ட நுணுக்கத்தை மாற்றி, ஊர்வலத்திற்கு பதிலாக,
தமிழ்ச்செல்வன் பெயரில் ஏதேனும், மக்களுக்கு நற்பணி செய்து இருந்தால், உதவி பெற்ற மக்களும், தமிழ்ச்செல்வனை மறவாது இருப்பர். இவர்களுக்கும் ஒரு மன நிம்மதி கிடைத்து இருக்கும். அல்லது, நெடுமாறன் அவர்கள், சேர்த்து வைத்து இருந்த, இலங்கை தமிழர்களுக்கான உணவை இலங்கை கொண்டு செல்லும் முயற்சியில் ஏதேனும் முன்னேற்றம் காண்பதற்கு, பிரதமரைச் சந்தித்து பேசி இருக்கலாம். அதற்கு வைகோ பிரதமரிடம் தனக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி இருக்கலாம். இதைப் போன்று ஏதேனும் செய்வதை விட்டு, வெறும் ஊர்வலத்தினால் யாருக்கு என்ன பயன்? துன்பம் தான் அதிகம்..

எனவே, காலத்தினால் எல்லாம் மாறுவது போல், போராட்ட நுணுக்கங்களும் மாற வேண்டும். மக்களுக்கு புரியும் வகையில் போராட்டங்களும் மாற வேண்டும். அதை விட்டு விட்டு, தன்னுடைய அரசியல் எதிரி தன்னைத் தடுத்து விட்டாரே என்றெண்ணிக் கொண்டு, நான் நினைத்ததைத் தான் செய்வோம் என்ற மனப்பான்மை, வைகோ, நெடுமாறன் போன்ற நேர்மையான அரசியல்வாதிகளுக்கு அழகில்லை.

Thursday, July 05, 2007

ஒரு வருடம் முடிந்தது..

ஆம், நான் அமெரிக்கா வந்து இந்த மாதத்தோடு ஒரு வருடம் முடிந்தது. இந்த ஒரு வருடத்தில் நடந்தது பற்றித் தான் இந்த குறிப்பு. (blog ன் தமிழ் வார்த்தை என்ன? எனக்கு தெரியவில்லை)

உடனே தோன்றுவது, இந்தியாவில் இருந்த வரைத் தமிழில் எவ்வாறு blog செய்வது என்றுத் தெரியாமல் இருந்தது. அமெரிக்கா வந்து கற்றுக் கொண்டேன். என் சகப் பணியாளர்களும் தெரிந்து கொள்ள வகை செய்தேன்.

முதலில் பார்த்த இடங்கள் என்று சொல்லப் போனால், ப்ளோரிடா, மியாமி, நயகரா, சிகாகோ கூறலாம். ப்ளோரிடா பயணத்தை மறக்க முடியாது. universal studios, disney world, nasa அனைவரும் பார்க்க வேண்டிய ஒன்று. நயகராவைப் பார்த்து விட்டு, மனிதர்கள் சண்டை போடுவதையும், தங்களுக்குள்ளேயே ஏமாற்றிக் கொள்வதையும் பார்த்தால், சிரிப்பு தான் வருகிறது. அவ்வளவு பெரியது நயகரா. பார்த்த இன்னும் ஒன்று, சிவாஜி :). திரையரங்கம் சென்று பார்த்த வேறு படங்கள் : "வேட்டையாடு விளையாடு, போக்கிரி"

வேறு என்ன நடந்தது?

ஒரு கணிணி (laptop எப்படி சொல்வது), digital camera வாங்கினேன்.

என் நண்பன் நவநீ அமெரிக்காவிலிருந்து இந்தியா போய், மீண்டும் அமெரிக்கா வந்து விட்டான்.

என்னோடு 12265 2B யில் தங்கி இருந்த பாப்பு இந்தியா சென்று விட்டார்.

நான் ஒரு நிஸான் அல்டிமா வாங்கினேன். அமெரிக்காவில் ஓட்டுனர் உரிமம் கிடைத்து நன்றாக வண்டி செலுத்த கற்றுக் கொண்டேன்.

என்னுடன் கல்லூரியில் படித்த பாதி நண்பர்கள் அமெரிக்காவில் இருக்கின்றனர். அதில் இராஜாராம், நித்யா மற்றும் விஸ்வா போன்றவர்களை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.
என்னுடைய நண்பர்கள் நிறைய பேருக்கு கல்யாணம் நடந்தது அல்லது கல்யாணம் உறுதியானது. அவ்வளவு வயதாகி விட்டது :)


ஆர்குட் நன்கு பரிச்சயமானது. என்னுடைய ஆதர்ஷ் பள்ளி நண்பர்கள் நிறைய பேருடன் மீண்டும் தொடர்பு ஏற்பட்டது. குறிப்பிடத்தகுந்த பிற ஆர்குட் நண்பர்கள் : மிர்ச்சி சுசி, ஓ பக்கங்கள் ஞாநி..

நிறைய தோல்விகள் கிட்டியது. கடைசியாக கிடைத்தது, appraisal (தமிழ் வார்த்தை தெரியவில்லை) குறைந்தது. தோல்விகளில் இருந்து நிறைய தெரிந்து கொண்டேன். துன்பங்கள் வரும் போது தான், உண்மையான் நண்பர்கள் யார் என்று தெரிந்து கொள்ள முடிகிறது. ஆதலால் துன்பங்களும் நன்றே!! மேலும், பழைய நண்பர்கள் போனாலும் புதிய நண்பர்கள் கிடைத்தார்கள். :)

பார்த்துக் கற்றுக் கொண்டதை விட, அனுபவித்து நிறையவே கற்றேன். மனிதர்களை நன்றாக புரிந்து கொள்ளும் சந்தர்ப்பங்கள் நிறையவே கிடைத்தது. நூல்களில் படிப்பதை வாழ்க்கையில் அப்படியே செயல்படுத்துவது எவ்வளவு கடினம் என்பதை மிகத் தெளிவாக புரிந்தது.

அதோடு இன்னொன்றும் நன்றாகத் தெரிந்து கொண்டேன். துன்பங்கள் வரும் போது, அதைச் சரி பண்ணும் வழிகளும் எளிதாகத் தெரியத் தான் செய்கிறது. நமக்கு தேவையெல்லாம், துன்பங்களை எதிர் கொள்ளும் துணிவு தான். அதை அதிகரிக்க முயலுகிறேன்..

வரும் ஆகஸ்ட் மாதம் மீண்டும் இந்தியா செல்கிறேன். :)

மீண்டும் சென்னை, வேளச்சேரி...பார்ப்போம், அடுத்த வருடம் இந்தியா என்ன கற்றுத் தருகிறது என்று?

Monday, June 25, 2007

சிவாஜி.....

மீண்டும் சிகாகோ சென்றேன் இரஜினியின் சிவாஜி பார்க்க !! படம் எனக்கு பிடித்து இருந்தது. 'அதிரடிக்காரன்' பாட்டு அட்டகாசம்... இரஜினி பஜ்ஜி சாப்பிட்டுக் கொண்டே சுமனிடம் பேசும் காட்சி அதிரடி... இது போன்று பல காட்சிகள் எனக்கு மிகவும் பிடித்தது.. சில logical (லாஜிக்கல் - இதற்கான தமிழ் வார்த்தை தெரிவில்லை) பேத்தல்கள் இருந்தன. ஆனால் அது இப்பொழுது எல்லா திரைப்படங்களிலும் இருக்கிறது. இரஜினி - ஷங்கர் படம் மட்டும் என்ன விதிவிலக்கா?

படத்தில் இரஜினியின் முயற்சிகளை முறியடித்து விட்டு, சுமன் சிரித்து கொண்டே இரஜினியிடம் பேசுவது போல் ஒரு காட்சி இருக்கிறது. எல்லா வில்லத்தனங்களையும் செய்து விட்டு இரஜினிக்கு உதவி ஏதாவது வேண்டுமா என்று சுமன் கேட்பது போல் அந்த காட்சி அமைக்கப்பட்டிருக்கும். அப்பொழுது இரஜினி கோபப்பட்டு 'உனக்கு எல்லாம் நல்ல சாவே வராது டா' என்று கூறுவார்..

இதைப் போன்ற காட்சிகள் இதற்கு முன்னரே பல படங்களில் வந்து இருந்தாலும், அப்பொழுதெல்லாம் எனக்கு அக்காட்சிகளின் அழுத்தம் வெகுவாக புரியவில்லை.

ஆனால், இப்பொழுது என் தனிப்பட்ட வாழ்க்கையில் நான் இதைப் போன்ற அனுபவங்கள் நிறைய சந்தித்து விட்டதால், அந்த காட்சியின் அழுத்தம் நன்றாகவே புரிந்தது. ஏன் இரஜினிக்கு அவ்வளவு கோபம் வருகிறது என்பது எனக்கு எளிதாகவே உணர முடிந்தது. ஒரு மனிதனுக்கு நியாயமாக கிடைக்க வேண்டியதை மீண்டும் மீண்டும் தடுத்தால், அவன் தனது நேர்மையான பாதையில் தவறுவது மிகவும் எளிதாகிறது.

படத்திலும் இரஜினி அதையே செய்கிறார். அவ்வாறு செயல்கள் புரிந்து வெற்றி காண்பதாக இயக்குனர் காண்பிக்கிறார். ஆனால் உண்மையான வாழ்க்கையில் அதுவும் முடியாது.

ஆதலால், மக்கள் பொதுவாகவே இதைப் புரிந்து கொண்டு, எதைப் பற்றியும் கவலைப்படாமல், தங்கள் வாழ்வு செழிக்க என்ன தேவையோ அதைச் செய்து கொண்டு வாழப் பழகிக் கொண்டனர். இதைத் தான் பலர் சுயநலம் என்றுக் கூறுகின்றனர். ஆனால், மக்களுக்கு வேறு என்ன தான் வழி இருக்கிறது?

உங்களுக்கு ஏதேனும் தெரிகிறதா?

Tuesday, March 13, 2007

Living Style - Books are contradicting...

Like my previous blogs, i wanted to write this also in tamil. But i intended my friend devraj should also read this as i got the idea of writing this blog from him. So, in English....(Devraj is a bengali and he doesn't know to read tamil though he speaks :) )

A few days before, Devraj was talking with me about a book he read.

Name : 48 Laws of Power
Author : Robert Greene

He was telling me about some of the laws / ways that the author has told / guided people for their success in life. i was really surprised abt some of the laws the author has told. One of the laws say

"Never put too much trust in friends, learn how to use enemies"

The second part seems to be ok (not with full heart).. anyways..but see the first part.. if we dont trust a guy, then how can i call him as my friend? i dont see any logic in the first part of the sentence. may be he talks about the amount of trust. But how do we measure that..is a 15 cm scale enough:).

Basically, India is a country in which friendship is seen even between ppl who are doing injustice also. i mean Karna and Duriyodhana. Though duriyodhana was wrong and even karna knows it, and the biggest thing comes here..karna even knows he will be fighting against his own brothers if he is on the duriyodhana's side. then too, because of friendship, he stays in the side of duriyodhana and dies for him also. if at all, the law told in the book has been published in that age, i dont think there would have been these sort of illustrations of friendship etc. not only friendship, for any other relationship. it wouldn't take much time for spreading this concept for other relationships also. Then, finally there would have been no belief / love between parents and children, brother and sister..

Similarly there were two / three laws which contradicted the ways that have been told in indian books. Tell me one thing guys..Do you think Success is the only thing that we need in life? And for that if we are going to lose the credibility in our relationships, is that fine?

Earlier, ppl used to say only western dressing culture, music is migrating towards india. Now, slowly the cultures, idealogies etc is also migrating to india from west.. i would say these opinions are the ones which has increased divorce of couples, increase in population of parents in old homes, deceiving friends etc..

Some people may say, this is your opinion and that is the author's opinion..may be..but which is right?
U DECIDE..
Do you want to live in a world where u have credible friends, parental love, brotherly affection, Nephew / Niece's Smile etc.. and win the world together?
or
a world where u will succeed but no one you can trust and just your success is with you..Then is it a real success?