Saturday, December 04, 2010

ரௌத்திரம் பழகு - எதிர்ப்பைக் காட்டு


"தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன்" என்பது போல, தகுதி என்று ஒன்று இல்லாமல் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்று இருப்பதே இந்திய நாட்டின் மிகப் பெரிய பிரச்சினை. பிற நாடுகளிலும் இப்படியே இருந்தாலும், மக்கள் தொகை அதிகம் இருக்கும் இந்தியா போன்ற நாடுகளில் இதனால் அதிகம் பாதிப்பு ஏற்படுகிறது.  யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம், கட்சி தொடங்கலாம், கொள்கை என்று ஒன்றும் தேவையில்லை என்பதே உண்மையான நாட்டின் மீது அக்கறை உள்ளவர்கள் அரசியலில் ஈடுபடத் தயங்குவதற்கு காரணமாக இருந்தது 1990களில். இப்பொழுது நாட்டின் மீது அக்கறை உள்ள இளைஞர்கள் உள்ளார்களா என்றே ஐயமாக உள்ளது. நான் பேசுவது எல்லாமே நாட்டில் இன்று நடந்து கொண்டிருக்கும் ஊழல்களையும் அதில் அரசியல் கட்சிகளின் நிலைப்பாடுகளையும் பற்றித் தான். காலம் செல்ல செல்ல, கட்சி ஆரம்பித்தது எதற்காக என்பதே தலைவர்களுக்கு மறந்து விடுகிறது. 

பெரியார், திராவிடர் கழகம் தமிழ்நாட்டில் ஆரம்பித்த போது, சாதிக் கொடுமை மற்றும் சாதி வேற்றுமைகளைக் களைய , தமிழர்க்கென ஒரு கட்சி தமிழர்களின் தனித்துவத்தைக் காண்பிக்க (திராவிட நாடு) மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு மாற்று என்று ஏகப்பட்ட காரணங்களை முன் வைத்தே, தன் கட்சிக்கு கொள்கைகளை வகுத்தார். அந்த காரணங்களும், கொள்கைகளும் போக, தன் கட்சியினருக்கு பதவி ஆசையோ, பண ஆசையோ வந்து விடக்கூடாது என்பதற்காகவே, தேர்தலில் போட்டியிட மாட்டோம் என்று ஒரு விதியைக் கட்சிக்கு வகுத்தார் பெரியார். அதை அவர் உயிரோடு இருக்கும் வரை கண்டிப்பாக கடைபிடித்தார். 

பின்னர், பெரியாரிடம் ஏற்பட்ட வேறுபாடுகளால், தி.க. வில் இருந்து பிரிந்து திமுகவை அண்ணா உருவாக்கிய  போதும்,  தி.க. வின் கொள்கைகளையே தி.மு.கவும் பின்பற்றும் ஆனால் திகவை போல் இல்லாமல் தேர்தலில் போட்டியிடுவோம்.இந்த மாற்றம் நம் கொள்கைகளைச் செயல்படுத்தவே என்று அறிவித்தார். இது திக மற்றும்  திமுக இடையிலான வித்தியாசமாகவும் ஒரு புதிய கட்சி தோன்ற ஒரு காரணமாகவும் இருந்தது. 1949ல் திமுக உருவாகி 1967ல் ஆட்சியையும் பிடித்தது. அண்ணா 1969ல் இறந்த பின்னர், கருணாநிதி திமுகவின் தலைவர் ஆனார்.

அண்ணாவின் காலத்திலேயே திமுக தன் கொள்கைகளில் அவ்வபோது மாறிக் கொண்டே இருந்தது. முதலில் திகவின் கொள்கைகளில் இருந்து எடுத்து வந்த திராவிட நாடு திராவிடர்களுக்கே என்ற கொள்கை, பின்னர் தமிழ்நாடு தமிழர்களுக்கே என்று மாறி, அதன் பிறகு மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்று மாறி இன்றும் இருந்து வருகிறது.  இந்தி எதிர்ப்பு மற்றும் மொழிப்போராட்டம்... அண்ணா இருந்த வரை, மாறிக்கொண்டே இருந்தாலும், கொள்கை என்று ஒன்று பெயரளவுக்கு இருந்து வந்தது. அண்ணா போனார். அவரோடு கொள்கைகளும் போனது. திமுகவின் கொள்கை என்ன என்று இன்று எனக்கு தெரியாது.

திமுகவில் இருந்து அதிமுக உருவான போது, அது கொள்கைகளை எதிர்த்து என்பதை விட கருணாநிதியை எதிர்த்தே உருவானது. அண்ணா பெரியாரிடம் வேறுப்பட்டு புதுக்கட்சியை உருவாக்கினார். எம்.ஜி.ஆர் கருணாநிதியை எதிர்த்து அதிமுகவை உருவாக்கினார். எனவே அதிமுகவின் கொள்கைகள் என்ன என்று மக்கள் என்றுமே தெரிந்து கொள்ள முனைந்தது இல்லை. அது தான் ஆரம்பம். அன்று முதல் தமிழ்நாட்டில் எண்ணற்ற கட்சிகள் உருவாகின. எந்த கட்சிக்கும் தனியே கொள்கை என்றோ, கட்டுப்பாடுகள் என்றோ எதுவும் கிடையாது. தேர்தலுக்கு தேர்தல் மாறிக் கொண்டே இருப்பது தான் எங்கள் கொள்கை என்று மாறிப் போனது. "ஊருக்கொரு கட்சி, ஆளுக்கொரு கொள்கை" என்று எம்.ஆர்.இராதா கூறுவது போல் ஆகி விட்டது. 

 கட்சிக்கென்று கொள்கை என்று வேண்டாம். தங்களுக்கென்று ஒரு நிலைப்பாடாவது வேண்டாமா?ஊழலைப் பொறுத்த வரை நம் நாட்டின் தேசிய மற்றும் மாநில கட்சிகளின் நிலைப்பாடு தான் என்ன?

காங்கிரஸ் ஊழல் கட்சி என்று கூறிக்கொண்டு, நாடாளுமன்றத்தை முடக்கும் பாஜக தாங்கள் ஆட்சி செய்யும் கர்நாடக மாநிலத்தில் எடியூரப்பாவின் ஊழலைக் கண்டுக்கொள்ளாமல் இருக்கிறது. ஆக காங்கிரஸிற்கும் பாஜகவிற்கும் பெரிய வித்தியாசம் கிடையாது கொள்கையிலோ நிலைப்பாடுகளிலோ!

திமுக மந்திரி அ.ராசா ஊழல் செய்துள்ளார் அவரை நீக்க வேண்டும். திமுக தரும் ஆதரவை நாங்கள் வேண்டுமானாலும் தருகிறோம் என்று அதிமுக கூறுகிறது. காங்கிரஸ் அரசிற்கு தெரியாமலா இவ்வளவும் நடந்து இருக்கும்? அது மட்டுமில்லாமல், காங்கிரஸ் முன் காலங்களில் போபர்ஸ், காமன்வெல்த் போன்ற ஊழலகளில் ஈடுபட்ட கட்சி தானே! அப்படிப்பட்ட ஒரு கட்சிக்கு அதிமுக எப்படி ஆதரவு கொடுக்க முடியும்? உங்கள் நிலைப்பாடு என்ன வென்றால் திமுகவை தவிர மற்ற எல்லா கட்சிகளும் ஊழல் செய்து கொள்ளலாம் என்பதா? கொள்கை / நிலைப்பாடு என்று ஒன்றும் கிடையாது. எப்படியாவது ஆட்சிக்கு வர வேண்டும் என்பதே ஒரே கொள்கை. 

மதிமுகவும் திமுகவை எதிர்த்தாலும், காங்கிரஸை எதிர்ப்பது ஈழப் பிரச்சினைகளுக்காக. ஆனால் ஊழல் மட்டும் என்ற பேச்சு வரும் போது என்ன செய்யும் என்று தெரியவில்லை. இப்போதைய சூழ்நிலைகளில் ஈழம் தீரப்போகும் ஒரு பிரச்சினையாக தெரியாதலால், கண்டிப்பாக ஸ்பெக்ட்ரம் ஊழலில் காங்கிரஸிற்கு ஆதரவாக மதிமுக போகாது. மதிமுகவுக்கும் தமிழத்தைப் பொறுத்த வரை கொள்கையோ நிலைப்பாடோ கிடையாது. கருணாநிதியை எதிர்ப்பதை கொள்கை. ஈழ ஆதரவு என்பது நிலைப்பாடு. 

பாமகவின் கொள்கைகளையோ, நிலைப்பாடுகளையோ விமர்சிக்க தேவையில்லை என்பதே ஊரறிந்த உண்மை. அந்த கட்சி தேர்தல் மற்றும் பதவிகளுக்காக யாரை வேண்டுமானாலும் ஆதரிக்கும், தங்கள் நிலைப்பாடுகளை மாற்றிக் கொள்ளும்.

தேமுதிகவின் கொள்கை என்ன என்று விஜயகாந்திடம் கேட்டார்கள். அவர் கூறிய பதில் "தமிழ்நாட்டில் உள்ள பிரச்சினைகளை ஒழிப்பதற்கு என்ன கொள்கை தேவைப்படுமோ அது தான் என் கட்சியின் கொள்கை". ஆக கொள்கை என்று ஒன்று இப்போதைக்கு கிடையாது. இந்த தேர்தலில் தனியாக நிற்க முடியாது, நின்றால் கட்சி ஆட்டம் கண்டு விடும் என்பதால் இன்னும் தன் நிலைப்பாடுகளைத் தெளிவாக கூறாமல் இருக்கிறார்.

கடைசியாக கம்யூனிஸ்டுகள். தேர்தலில் போது அவ்வ போது கூட்டணி மாறினாலும், இவர்களிடம் கொள்கை என்று கொஞ்சம் உள்ளது. தாராளமயம் மற்றும் தனியார்மயமாக்குதலுக்கு எதிர்ப்பு, அமெரிக்காவிடம் பணிந்து போவதற்கு கண்டனம், ஊழல்களை எதிர்த்து போராடுவது, ஒருவர் 3 முறைக்கு மேல் பதவிக்கு வர முடியாது, அரசு சம்பளத்தை கட்சியிடம் கொடுத்து விட்டு, கட்சியிடம் இருந்து குடும்பம் நடத்துவதற்கு பணம் வாங்கிக் கொள்வது, எளிமை, தொழிலாளர்களுக்காக போராடுவது என்று கம்யூனிஸ்டுகளின் கொள்கைகளைப் பட்டியலிடலாம். நமக்கு ஒத்து வருகிறதோ இல்லையோ, சரியோ தவறோ, இவர்களிடம் கொள்கை என்று ஒன்று கண்டிப்பாக உள்ளது. நிலைப்பாடு - காங்கிரஸ் அமெரிக்காவிற்கு அடி பணிகிறது தாராளமயம் மற்றும் தனியார்மயத்தை ஆதரிப்பதால், காங்கிரஸிற்கு எதிர்ப்பு. பாஜக ஒரு மதவாத கட்சி என்று எதிர்ப்பு. 

(இன்னும் பல கட்சிகள் இருக்கின்றன, அவை எல்லாவற்றையும் பற்றி எழுதுவது என்றால் இந்த பதிவு முடியாது. ஏனெனில் அவ்வளவு கட்சிகள் தமிழ்நாட்டில் உள்ளன. தொடர்ந்து வரும் இந்த சுட்டியை பார்க்கவும். http://en.wikipedia.org/wiki/Category:Political_parties_in_Tamil_Nadu)

ஆக இன்றைய சூழலில், கொள்கை, நிலைப்பாடு உள்ள கட்சிகள் என்று பார்த்தால், அது மதிமுக மற்றும் கம்யுனிஸ்டுகளிடம் மட்டும் தான்.

எப்படி வந்தது இந்த நிலைமை? கொள்கையே இல்லாமல் கட்சி நடத்தும் தைரியம் எங்கிருந்த வந்தது தலைவர்களுக்கு? நம்மிடம் இருந்து தான். "ரௌத்திரம் பழகு" என்று பாரதி கூறியதை நாம் மறந்து விட்டோம்.  சமுதாயத்தில் என்ன நடந்தால் என்ன? யாரைப் பற்றியும் தவறாக கூறாதே! ஒருவர் செய்வது சொல்வது தப்பு என்று தெரிந்தாலும் வீணாக அதைப் பற்றி அவரிடம் கூறி, அவருடைய நட்பை பகைத்து கொள்ளாதே! அவர் சொல்வதை செய்து விட்டு, நீ இருக்கும் இடத்தில் எப்படி மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்றுப் பார், அப்புறம் வெளிநாடுகளில் எப்படி போய் பணம் சம்பாதிப்பது என்று உன் வாழ்க்கையை பார். இப்படி தான் இன்றைய ITஇளைஞர்களின் எண்ணம் உள்ளது. எதிர்ப்பே இல்லாவிட்டால் நோஞ்சான் கூட நம்மீது கல்லெறிவான். அது போல நாம் எதிர்ப்பே எதற்கும் காட்டாவிட்டால், நம் நாடு இப்படி தான் இருக்கும்.

பார்த்தீர்களா, இங்கிலாந்தில் இராஜபட்சேக்கு காட்டப்பட்ட எதிர்ப்பை.. அவர்கள் இத்தனைக்கும் புலம் பெயர்ந்த தமிழர்கள். தமிழர்களின் எதிர்ப்பிற்கு பயந்து கூட்டத்தையே ரத்து செய்து விட்டது ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம். ஆனால் நாம் பிறந்த வளர்ந்த தமிழ்நாட்டிலேயே இருந்துக் கொண்டு ஒன்றும் செய்யவில்லை இராஜபட்ச இந்தியா வந்த போது. அது தான் நமக்கு தெரிந்தது. அவர்கள் பழகியிருக்கும் ரௌத்திரம் சீக்கிரம் நாமும் பழக வேண்டும். இல்லாவிட்டால், இன்னொரு முறை நாம் அடிமைப் பட்டு போனாலும் போவோம். 

இதைப் படிக்கும் பேஸ்புக் நண்பர்களே, இந்தியர்களே, தமிழர்களே, இளைஞர்களே, ஏதேனும் பதிவு செய்யுங்கள், உங்கள் எதிர்ப்பாக. பேஸ்புக் மற்றும் அனைத்து ஊடகங்களும் புகைப்படம், காணொளி, துணுக்குகள் பரிமாறிக் கொள்ள ம்ட்டுமன்று, உங்கள் எதிர்ப்பை உரத்து சொல்வதற்காகவும் தான். பார்க்கிறேன், எத்தனை பேர் பதிவு செய்கிறீர்கள் என்று. நானே முதல்வனாக இருக்கிறேன்.

Friday, September 24, 2010

காமன்வெல்த் அலங்கோலம்!!

புலியைப் பார்த்து சூடு போட்ட கதையாகிப் போனது, இந்தியாவில் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள். சீனா ஒலிம்பிக்ஸ் நடத்தியதே, நம்மால் முடியாதா என்று தான் நானும் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் நாம் பூனை தான் என்று அரசியல்வாதிகள் நிரூபித்துவிட்டனர். ஏற்கனவே "ஸ்லம்டாக் மில்லியனர்" படம் எடுத்து, நம் நாட்டின் ஏற்றத்தாழ்வுகளைப் படம் பிடித்துக் காட்டி, 8 ஆஸ்கர் விருதுகளையும் தட்டிக் கொண்டு போய் நம் மானத்தை வெளிநாடுகள் வாங்கி விட்டன. மீதி இருக்கும் மானத்தை வாங்குவதில், சுரேஷ் கல்மாடிக்கும், எம்.எஸ் கில் க்கும் நடுவில் பயங்கர போட்டி வேறு. 

இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக, 1996ல் இருந்து இன்று வரை, 14 ஆண்டுகளாக இருப்பவர் உயர்திரு.சுரேஷ் கல்மாடி. இவருக்கும் விளையாட்டுக்கும் ஏதும் சம்பந்தம் உண்டா என்றால் கிடையாது. இந்திய விமான படையில் பணி புரிந்து இருக்கிறார். காங்கிரஸில் சேர்ந்து, MP ஆகி விட்டதால், ஏதாவது ஒரு பதவி வேண்டும் என்பதால், இணை இரயில்வே அமைச்சராக இருந்திருக்கிறார், நரசிம்மராவ் அமைச்சரவையில். ஒரு பட்ஜெட் வேறு தாக்கல் செய்து இருக்கிறார். மீண்டும் அமைச்சர் பதவி கிடைக்காதலால், 1996 ல் இருந்து ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராகக் இருக்கிறார். ஒரு முன்னால் இரயில்வே அமைச்சர் வேறு ஒரு துறைக்கு அமைச்சரானால் ஏற்றுக் கொள்ளலாம். அதுவுமே, இரயில்வே சம்பந்தப்பட்ட துறையாக இருந்தால் தான் ஒத்துக் கொள்ள முடியும். ஆனால், இரயில்வேயில் இருந்து, திடீரென தனக்கு சம்பந்தமேயில்லாத ஒலிம்பிக் சங்கத்தில் குதித்து உள்ளார், இந்த மாண்புமிகு மாஜி. இது தான் தொடக்கம். இது எங்கு சென்று நிற்கிறது என்றால், மு.க.அழகிரி உரத்துறை அமைச்சராக இருப்பதில். இன்னும் தொடர இருக்கிறது.  

ஒலிம்பிக் சங்கத்தின் வேலையே, ஒலிம்பிக்ஸ் செல்லத் தகுதியான வீரர்களைச் கண்டுபிடிப்பது. எந்த ஒரு விளையாட்டிலுமே பெரிதாக தன்னை ஈடுபடுத்திக் கொள்ளாத ஒருவரை சங்கத்தின் தலைவராக 14 ஆண்டுகள் வைத்து இருப்பது நம் நாட்டின் தனித்துவம். அதனால் தான் ஒலிம்பிக்ஸ் ல் இருந்து வெறும் காத்து தான் வருகிறது. பதக்கம் வரவே மாட்டேங்கிறது.

அடுத்த எம்.எஸ். கில். இவரைப் பற்றி ஒரு நிகழ்ச்சி சொல்கிறேன். அது மட்டுமே போதுமானது. அண்மையில் மல்யுத்த வீரர் சுசில் குமார், மாஸ்கோவில் தங்கம் வென்று, விளையாட்டு அமைச்சரான எம்.எஸ். கில்லைப் பார்க்க வந்த போது, தன்னால் முடிந்த அளவு, சுசில் குமாரின் பயிற்சியாளர்களை அவமதித்து அனுப்பியுள்ளார். புகைப்படம் எடுக்க போன போது, பயிற்சியாளரை வெளியே தள்ளாத குறை. பயிற்சியாளர் மனம் எவ்வளவு வேதனைப் பட்டிருக்கும்? அதற்கு ஒரு வருத்தம் கூட தெரிவிக்க வில்லை இன்னும் இந்த மாண்புமிகு.

அதே போல், பாட்மிண்டன் சாம்பியனான சாய்னா வந்து சந்தித்த போது, அவரின் பயிற்சியாளரான உலகப் புகழ்பெற்ற பாட்மிண்டன் ஆடவர் சாம்பியனான கோபிசந்தைப் பார்த்து இவர் யார் என்று கேட்டவர் தான் இந்த எம்.எஸ்.கில். இதற்கு முன்னர் இவர் பார்த்த வேலை, இந்தியாவின் தேர்தல் ஆணைய அதிகாரி. இவருக்கும் விளையாட்டுக்கும் கடுகளவு கூட சம்பந்தம் கிடையாது. ஒரு சீக்கியர் என்பதால் இவருக்கு வந்த சேர்ந்த பதவி இது என்று நினைக்கிறேன்.



இப்படியாக விளையாட்டுக்கு கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லாத, மனிதாபிமானம் இல்லாத அதிகாரிகளும், அமைச்சர்களும் திட்டமிட்டு நடத்தினால், காமன்வெல்த அலங்கோலாமாகத் தான் இருக்கும். தலைவரும், அமைச்சரும் நேர்மையானவர்களாகவே இருந்தால் கூட, விளையாட்டு பற்றி ஒன்றுமே தெரியாத இவர்களால், எப்படி அவர்கள் கீழே உள்ள அதிகாரிகள் தவறு / ஊழல் செய்வதை கண்டுபிடிக்க முடியும்? 

இவர்களுக்கு இந்த பதவியைக் கொடுத்த மத்திய அரசே காமன்வெல்த் சூட்டிற்கு காரணம். நண்பர்களே, இதைப் படித்து விட்டு உங்கள் எதிர்ப்பை நீங்களும் எப்படியாவது சொல்லுங்கள். இந்த இருவரும் பதவியில் இருந்து நீக்கப் பட வேண்டும். கொஞ்ச நஞ்சமல்ல, 70000 கோடி செலவு செய்து நடத்தும் விளையாட்டு போட்டி இது. 

Sunday, September 19, 2010

என்று வரும் அரசின் தகவல் தொழில்நுட்ப திட்டங்களுக்கு விடிவு?

அண்மையில் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் இனிமேல் கால் கடுக்க நிற்க வேண்டாம், இணையம் வழியாக வேலை வாய்ப்பு வலைத்தளத்தில் பதிவு / புதுப்பித்து செய்து கொள்ளலாம் என்ற தமிழக அரசின் அறிவிப்பு வந்தவுடன், யார் மகிழ்ச்சி அடைந்தார்களோ இல்லையோ, நான் மிகவும் மகிழ்ந்து போய் இருந்தேன். ஆனால், அந்த மகிழ்ச்சி எல்லாம், வலைத்தளம் தொடக்க நாளான, 15/09/2010, அன்றோடு போய்விட்டது. தொடங்கப்பட்ட நாள் முதலே அது வேலை செய்ய வில்லை. இன்று வரை அது சரியும் செய்யப்படவில்லை. (www.tnvelaivaippu.gov.in)


நான் ஏன் மகிழ்ந்து போயிருந்தேன்? எப்படியாயினும் என்னுடைய வேலையான தனியார் IT நிறுவன வேலைகளுக்கு அங்கு போய் பதிவு செய்து எந்த பயனும் இல்லை. ஆனாலும் நான் மகிழ்ந்ததற்கு காரணம் என்னுடைய குடும்ப பின்ணணியே. என் அப்பா,தனக்காக ம்ற்றும் தன்னுடைய தம்பிகளுக்காக, 20 வருடங்களுக்கு முன்னால், வேலை வாய்ப்பு அலுவலகத்தில் கால் கடுக்க நின்று இருக்கிறார். அதைப் பற்றி என்னிடம் கூறிய போது, என் மனதும் வலித்தது. இன்றும் என் குடும்பத்தில் கிராமங்களில் உள்ளவர்கள், தூத்துக்குடி சென்று பதிந்து விட்டு வ்ருவது என்க்கு தெரியும். ஒரு நாள் அதற்காகவே செலவிடுவர். காலையிலேயே சென்று விடுவர், வரிசையில் முதலில் இடம் பிடிப்பதற்காக.. ஆனாலும் அதற்கு முன்னரே வரிசையில் குறைந்தது 100 பேராவது நிற்பர். காலையில் சென்றால் மதியம் பதிவு செய்து விட்டு வீடு திரும்புவதற்கு எப்படியும் சாயுங்காலம் ஆகிவிடும். சரி, இந்த பிரச்சினை எல்லாம் இனிமேல் இல்லை என்று நினைத்தால் விடிவு உனக்கு அவ்வளவு சீக்கிரம் தருவோமா என்று என்னைப் பார்த்து ஏளனம் செய்கிறது தமிழக அரசு.

ஏன் நம் நாட்டில் மட்டும் இப்படி எதுவுமே வேலை செய்ய மாட்டேன் என்கிறது? அதற்கு அந்த வலைத்தளத்தைப் பார்த்தாலே போதும். காரணம் புரிந்துவிடும். வலைத்தளத்தில் நம்மால் பதிவு செய்ய முடிகிறதோ இல்லையோ, ஆனால் கலைஞரையும், மு.க.ஸ்டாலினையும் கண்டிப்பாக பார்க்க முடியும். ஏதோ அவர்களே இந்த வலைத்தளத்தை உருவாக்கியது போல. தமிழக அரசு சம்பந்தப்பட்ட எந்த வலைத்தளத்தை வேண்டுமானாலும் போய் பாருங்கள்! எல்லாவற்றிலும் கலைஞர் படம் போடப் பட்டிருக்கும். கலைஞர் என்ன நினைக்கிறார்? அவர் தான் தமிழகத்தின் நிரந்தர முதலமைச்சரா? அடுத்த ஆட்சியில் அம்மையார் வந்தால் முதல் வேலையே இந்த படங்களை எல்லாம் எடுப்பது தானே! இதைக் கூடவா தலைச்சிறந்த அரசியல் சாணக்கியரான கலைஞருக்கு சொல்லித் தர வேண்டும்?

http://www.chennaicorporation.gov.in/
http://www.mtcbus.org/

பின்லாந்து நாட்டிலுள்ள பேருந்து தகவல் வலைத்தளத்தையும் பாருங்கள் (http://www.reittiopas.fi/en/). அது எவ்வளவு அழகாக வேலை செய்கிறது? ஆனால் தமிழ்நாட்டில் எப்படி இருக்கிறது போக்குவரத்து கழக வலைத்தளம். இத்தனைக்கும் இந்தியாவில் தான், உலகிலேயே சிறந்த மென்பொருள் வல்லுனர்கள் உள்ளதாக அனைவரும் ஒப்புக்கொண்டுள்ளனர். ஏன் நம்மால் மட்டும் முடியவில்லை?

தலைவர்களுடைய படங்களைப் போடுவதற்கு எடுத்த சிரத்தையில் சிறிதேனும், அதை இயங்க வைப்பதில் இருந்து இருந்தால், அது கோடானு கோடி மக்களுக்கு பயன் பட்டிருக்கும். ஆனால், நம் ஆட்சியாளர்கள் தங்கள் பெயரை நிலை நாட்டுவதிலேயே குறியாய் இருக்கின்றனர். எல்லா பேருந்து நிழற்குடைகளிலும், அதை எந்த MLA / MP தொகுதி நிதியிலுருந்து கட்டப்பட்டிருக்கிறதோ அதை உடனே எழுதப்படுகிறது. அதனால் மக்களுக்கு என்ன பயன்? ஏன், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இரண்டு கல் பலகைகளில், அம்மையார் திறந்து வைத்ததாகவும், அய்யா அடிக்கல் நாட்டியதாகவும் இருப்பது போல், உலகில் எங்கும் நாம் பார்க்க முடியாது. தமிழக அரசின் நிதியில் இருந்து பணம் கொடுத்து, அரசு சம்பளத்தில் வேலைப் பார்க்கும் ஊழியர்களால் கண்காணிக்கப்பட்டு, கொத்தனார்களால் தினக்கூலிக்கு கட்டப்பட்ட பேருந்து நிலையத்திற்கு இவ்வளவு ஆர்ப்பரிப்பு..:)

என்ன தெரிகிறது இதிலிருந்து? தன் பெயரை நிலைநாட்டி, எப்பொழுதுமே ஆட்சியில் இருப்பது தான் இவர்களின் குறிக்கோள். காமராஜர் மதிய உணவு திட்டம் கொண்டு வந்த போது, காமராஜர் மதிய உணவு திட்டம் என்று பெயர் வைக்கவில்லை. ஆனால், இப்போது கலைஞர் காப்பீட்டு திட்டம். ஏதோ கலைஞர் தன் சொந்தப் பணத்தில் காப்பீட்டு திட்டம் செயல் படுத்துவது போல். அம்மையாரும் இதற்கு விதி விலக்கல்ல. தன் ஆட்சிக்காலத்தில், புரட்சித்தலைவி ஜெ.ஜெயலலிதா விரைவு பேருந்து என்று தன் பெயரிலேயே பேருந்து விட்டவர் தான். ஆக மொத்தத்தில் மக்கள் நலன் முக்கியமே இல்லை. ஆட்சியில் இருந்துக் கொண்டே இருக்க வேண்டும். அப்படியானால் எப்படி வேலை வாய்ப்பு வலைத்தளம் வேலை செய்யும்?

என்னுடைய கோபம் கலைஞர் அல்லது ஜெயலலிதா மீது அல்ல. இந்த வேலை வாய்ப்பு வலைத்தளம் வேலை செய்யவில்லை என்பதில் தான் கோபம். அவர்களுக்கு எப்படியும் வலைத்தளம் பற்றி ஒன்றும் தெரிந்து இருக்க நியாயம் இல்லை. ஆனால், இதைச் செயல் படுத்திய அரசாங்க அதிகாரிகள் என்ன கண்காணிக்கிறார்கள்? இப்படி ஒரு வலைத்தளம் உருவாக்கி கொடுத்தற்காக அந்த நிறுவனத்தின் மீது ஒரு வழக்கு பதிவு செய்ய வேண்டாமா? அல்லது அபராதத் தொகை வாங்க வேண்டாமா? அல்லது எப்பாடுபடுத்தியாவது அதை அடுத்த நாளிற்குள் சரி செய்து இருக்க வேண்டாமா? IT துறையில் இருப்பவர்களுக்குத் தெரிந்து இருக்கும். இவ்வாறு ஒரு வலைத்தளம் வேலை செய்யாமல் போனால், ஒரு அமெரிக்க நிறுவனம் என்ன செய்யுமென்று? இந்நேரத்திற்குள், அந்த IT நிறுவனம் பேர் சந்தி சிரித்து இருக்கும். ஆனால் இங்கு இது ஒரு பிரச்சினையாகவே மதிக்கப் படவில்லை. என்னைப் போன்ற நாட்டின் மீதும், நாட்டு மக்களின் துன்பம் அறிந்த, IT இளைஞனிடமோ / IT துறையில் ஏதேனும் அனுபவம் உள்ள கண்டிப்பான ஒருவரிடம் இதை ஒப்படைத்து இருந்தால், இந்த திட்டம் நாட்டிற்கே ஒரு வழிக்காட்டி திட்டமாக செயல் படுத்தப்பட்டிருக்கும். ஆனால் அப்படிப்பட்ட நபர்கள் அரசிடம் இருக்கிறார்களா என்பது சந்தேகமே!! சந்தேகம் தீர்க்கப்படும் வரை அரசு இப்படி தான் ஏமாந்து போய், நம்மைப் போன்ற மக்களையும் கால் கடுக்க வரிசையில் நிற்க வைக்கும்.

நாட்டின் மீதும் நாட்டு மக்களின் மீதும் அக்கறையுள்ள IT இளைஞர்களின் கையில் என்று தகவல் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அதிகாரம் செல்கிறதோ, அன்று தான் இதைப் போன்ற வலைத்தளங்களுக்கும், ஏனைய பிற தகவல் தொழில்நுட்பத் திட்டங்களுக்கும் விடிவு உண்டு. அது வரை அல்லல் படுவதும் வரிசையில் நிற்பதும் தான் வழி :(

Sunday, August 15, 2010

சுதந்திர நாளில் I.T இளைஞர்களுக்கு ஒரு வேண்டுகோள்

மனிதாபிமானம் விலை போகாத நிலையில், பணம் மட்டுமே பிரதானம் என்ற சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்நாட்களில், சுதந்திர தினம் போன்ற சில விழாக்களில் தான் மக்களுக்குப் பொது நலம் பற்றி சிந்திக்க நேரம் கிடைக்கிறது. அப்படி நம்பி என்னைப் போன்று IT துறையில் சம்பாதிக்கும் உங்களிடம் நான் வைக்கப் போவது ஒரு வேண்டுகோள்.

பெரும்பான்மையாக இன்று IT துறையில் வெற்றிக்கரமாக உள்ளவர்கள், ஏதேனும் ஒரு அரசினர் அல்லது அரசு உதவி பெறும் தனியார் பொறியியற் கல்லூரியில் தான் படித்து இருப்பர். அப்படி படித்து, கல்லூரியில் இருந்தே வேலை கிடைத்து, படிப்பு முடிந்த அடுத்த மாதமே 10,000க்கும் மேலாக சம்பாதித்து வெளிநாடுகளுக்கு எல்லாம் சென்று, இப்போதைக்கு ஓரளவுக்கு பணப்பிரச்சினை எதுவும் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருப்பர். கண்டிப்பாக இதில் உங்கள் உழைப்பு அடங்கியுள்ளது. ஆனால்  இந்த வெற்றிக்கு நாம் மட்டுமே முழுக் காரணம் ஆகிவிட முடியாது. நாம் படிக்கும் போது அரசு நமக்காக கட்டணங்களைக் குறைத்து, வ்சதிகளைச் செய்து கொடுத்ததும் ஒரு காரணம். அதற்கு நாம் ஏதாவது ஒரு வகையில் நாம் நன்றிக்கடன் செலுத்த வேண்டாமா?

அது மட்டுமில்லை, இன்று IT துறையினரால் சென்னை போன்ற நகரங்களில் வீட்டு வாடகை, ஆட்டோ வாடகை, பள்ளி கட்டணம் போன்ற அத்தியவாசிய தேவைகள் அளவுக்கு அதிகமாக விலை கூடி விட்டன. எவ்வளவு கேட்டாலும் கொடுக்கக் கூடிய நம்மைப் போன்றவர்களால், நடுத்தர மக்கள் படும் அவதி மிக அதிகம். இதனால், நம் மீது மிகுந்த கடுப்பில் (சென்னை மொழியில் சொல்வதென்றால் காண்டு) இருக்கின்றனர். ஆட்டோகாரர்கள் கூட "அது தான் 50000 வாங்குறீங்க லா சார், 10 20 எல்லாம் பாக்காதீங்க" என்று தான் சொல்கிறார்கள். இப்படிப் பட்ட விலைவாசி உயர்வினால் கல்வி ஒரு காஸ்ட்லி பொருள் ஆகி கொண்டே வருகிறது. இதற்கு மறைமுகமாக நாமும் ஒரு காரணம். 

இந்த நிலையைத் திருத்துவதோ, மக்களிடம் மனமாற்றம் கொண்டு வருவதோ, அந்நியன், இந்தியன் படத்தில் வருவதில் போல் அடித்து மரணபயத்தினால் புரட்சி ஏற்படுத்துவதோ முடியாத காரியம்.  ஆனால் ந்ம்மால் முடியும் காரியம் ஒன்று உள்ளது. அது கல்விக்கு உதவுவது. 

எல்லார்க்கும் கல்வி என்பது பேச்சளவில் தான் உள்ளது இந்தியாவில். அது நடைமுறைப்படுத்துவது எளிதல்ல. ஆனால், கல்வி உதவி கேட்டு கிடைக்காமல், படிப்பை நிறுத்தும் மாணவர்கள் நிறைய உண்டு. அவர்களுக்கும் நியாயமாகப் பார்த்தால் அரசு உதவி செய்ய வேண்டும். ஆனால் மக்கள் தொகை அதிகம் உள்ள நம் நாட்டில், அதிக மார்க் எடுத்து, அரசு கல்லூரியில் படித்தால் மட்டுமே உதவி எளிதாக கிடைக்கிறது. இந்தியாவில் உள்ள அனைத்து மாணவர்களும் அரசு கல்லூரியில் படிக்க முடியாதே!! 

பிற கல்லூரிகளில் இடம் கிடைத்தவர்கள், படிப்பைத் தொடர முடியாத நிலை பல மாணவர்களுக்கு ஏற்படுகிறது. சில நேரங்களில் அரசு கல்லூரியில் இடம் கிடைத்தும் பணம் கட்ட முடியாமல் போகும் மாணவர்களும் உண்டு. அவர்களுக்கு உதவுவது நம்மால் முடியும் காரியம், அதோடு நமக்கு கல்வியைக் குறைந்த கட்டணத்தில் அளித்த அரசிற்கும், அதன் மக்களுக்கும் நாம் செய்யக் கூடிய நன்றிக்கடன். ஒரு வகையில் இது ஒரு இந்திய குடிமகனாக நம் கடமையாகும்.

இந்த சுதந்திர நாளில் நாம் ஒரு உறுதிமொழி ஏற்க வேண்டும். ஒரு ஏழை மாணவனின் கல்விக்காவது ஒவ்வொரு வருடமும் நாம் உதவி செய்ய வேண்டும். அப்படி ஒரு மாணவனின் தொடர்பு எனக்கு கிடைக்கவில்லை என்று சமாதானம் உங்களுக்கு நீங்களே சொல்லிக் கொள்ளக் கூடாது. எப்படியாவது இந்த வருடத்தில் உங்களிடமிருந்து உதவி ஒரு ஏழை மாணவனுக்குச் சென்றடைய வேண்டும்.  I.Tயில் இருக்கும் உங்களுக்கு வருட முடிவில் goalsக்கு எதிராக appraisal இருப்பது போல் இந்த உறுதிமொழி உங்கள் மனிதாபிமானத்திற்கு நீங்கள் set பண்ணிக் கொண்டிருக்கும் கோல். அடுத்த ஆகஸ்ட் 15ல் இதற்கு ஒரு appraisal வைத்து கொள்வோம்.

இதுவே நான் உங்களிடம் வைக்கும் வேண்டுகோள்.

பி.கு: நீங்கள் எவ்வளவு தேடியும் ஒரு ஏழை மாணவன் கிடைக்க வில்லையென்றால், என்னை அணுகவும்.

Thursday, August 12, 2010

என் அப்பாவின் 60வது பிறந்த நாளின் (ஆகஸ்ட் 5 2010) போது நான் எழுதியது!!

அறுபது வயதைத் தொடும் என்
ஆதர்ச நாயகருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!

அயல் நாடுகளிலும் தேட வேண்டாம்
அருகாமையிலும் தேட வேண்டாம்
என் இல்லத்திலேயே எனக்கு கிடைத்த
எடுத்துக்காட்டு தலைவர் நீங்கள்!

உங்கள் உயர்ந்த உள்ளம் தந்த
ஊக்கத்தினால் தழைத்த வாழ்வு என்னுடையது!
என் வாழ்க்கையின் வழிகாட்டி நீங்கள்!

அன்பை அன்னையிடமும், அறிவை தந்தையிடமும்
கேட்ட தமிழ் மரபை மீறி,
என் வாழ்வின் மொத்ததிற்கும் அடிக்கோடிட்ட
என் பெற்றோரை விட
உயர்ந்த கடவுள் உண்டா?

Friday, August 06, 2010

நான் ஏன் கம்யூனிஸ்ட்களை ஆதரிக்கிறேன்?

அண்மைக் கால தமிழகத்துச் செய்திகளைப் படிப்பவர்களுக்கு இதை நான் ஒன்றும் சொல்ல தேவையிருக்காது. கருணாநிதியைத் திருட்டு ரயில் ஏறி வந்தவர் என்று ஜெயலலிதாவும், ஜெயலலிதாவை வாய்தா ராணி என்று கருணாநிதியும் மாறி மாறி தங்கள் சொத்து இரகசியங்களைப் பகிர்ந்து கொள்கின்றனர். இவர்கள் சண்டை போட்டு கொள்வதின் சாராம்சம் தான் என்ன? அது உணர்த்துவது என்ன? இருவரிடமும் ஏகப்பட்ட பணம் இருக்கிறது. மாற்றி மாற்றி அது எப்படி உனக்கு வந்தது என்றுக் கேட்டு அசிங்கப்படுத்திக் கொள்கினறனர். 

கருணாநிதியின் குடும்பத்தை எடுத்துக் கொள்வோம். நான் சொல்லி தெரிவதற்கு ஒன்றும் இல்லை. மகன்கள், மகள்கள், மாப்பிள்ளைகள், பேரன்கள், பேத்திகள், அவர்களின் குடும்பங்கள் அனைத்தும் இன்னும் ஒரு தலைமுறைக்கு ஒன்றுமே செய்யாவிட்டாலும், வெறுமனே படுத்து தூங்கினாலும் கவலையில்லை. எல்லாருக்கும் ஒரு பெரும் வருமானம் ஈட்டும் தொழில் இருக்கிறது.

ஜெயலலிதாவைச் சுற்றி சொத்துக்குவிப்பு வழக்குகள் தான் உள்ளன. பிறந்த நாள் பரிசு, Lexus கார் வாங்கியதில் வழக்கு, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு என எண்ணிக் கொண்டே போகலாம்.

ஆக மொத்தத்தில், 1950 - 70 களில் வாழ்ந்த தலைவர்கள் போதித்த எளிமை இவர்களிடம் எங்கு போனது? அதைத் தானே அரசியலில் ஈடுபடுவதற்குத் தகுதியாக வைத்து இருந்தனர். ஆனால், யாரேனும் ஒரு தலைவர் திமுகவிலோ, அதிமுகவிலோ நம்மால் இன்று காண்பிக்க முடியுமா? முடியாது. அவர்களும் அப்படி இருக்க வேண்டும் என்று இன்றைய மக்கள் நினைக்கவில்லை. எங்களுக்கு என்ன இலாபம் என்று தான் மக்கள் பார்க்கின்றனர். அதனால் கலர் டிவி தருகிறேன், இலவச நிலம் தருகிறேன், ஓட்டுக்கு பணம் என்று ஆட்சிக்கு வர முடிகிறது. நீங்கள் எவ்வளவு நாளும் அடித்துக் கொள்ளுங்கள், எங்களுக்கு கொஞ்சம் பங்கு தந்து விடுங்கள் என்பதே மக்கள் கருத்தாக இருக்கிறது.

ஆனால், கம்யூனிஸ்ட் தலைவர்கள் இன்றும் எளிமையாகத் தான் இருக்கின்றனர். அண்மையில் கோவை இரயிலில் சென்ற போது, தா.பாண்டியன் இரண்டாம் வகுப்பு பெட்டியில் அமைதியாக பயணம் செய்து, தனியாக இறங்கிச் சென்றதைப் பார்த்தேன். தா.பாண்டியன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக மாநிலத் தலைவர். திமுக, திமுக, காங்கிரஸ் போன்ற கட்சிகளின் ஒரு MLA இப்படி போவாரா? இரயிலில் பயணம் செய்யும் போது ஒரு கூட்டமும், இறங்கியதும் வரவேற்க தாரை தப்பட்டையுடன் ஒரு கூட்டமும் அல்லவா இருந்திருக்கும்?

இதுப் போக, அண்மையில் இறந்து போனாரே ஜோதி பாசு, அவர் தன் உடலுறுப்புக்களைப் பல வருடங்களுக்கு முன்னரே தானம் செய்து விட்டு அமைதியாக இருந்து விட்டு இறந்தும் போய் விட்டார். ஆனால் இங்கோ,ஸ்டாலின் உடலுறுப்புக்களைத் தானம் செய்ததை எல்லா பத்திரிக்கையிலும் போட்டு விளம்பரபடுத்தியுள்ளனர். நல்ல வேளை கருணாநிதி செய்ய வில்லை. செய்து இருந்தால் நாம் "தர்மத்தின் தலைவனுக்குப் பாராட்டு விழா" என்ற நிகழ்ச்சி பார்த்து இருப்போம் ரஜினி கமலின் பாராட்டுக்களோடு..

கருணாநிதி தன் வீட்டைத் தன் காலத்திற்குப் பிறகு இலவச மருத்துவமனையாக்க அறக்கட்டளை எல்லாம் அமைத்தார் என்பதற்காகப்  பாராட்டு விழா எல்லாம் நடத்திக் கொண்டிருந்த போது, ஆனந்த விகடன் பிற மாநில முதல்வர்கள் எங்கு வசிக்கிறார்கள் என்று பார்த்தது. கம்யூனிஸ்ட் ஆளும் திரிபுரா மாநில முதல்வர், மாணிக் சர்க்கார், வீட்டு வசதித் துறை கொடுத்துள்ள வீட்டில் வாழ்கிறார் என்று அறிந்தேன். இது எப்படி இருக்கு?

அது மட்டுமல்ல, அண்மையில் நடந்த கம்யூனிஸ்ட் அழைத்த பெட்ரோலிய பொருட்கள் விலை  உயர்வை எதிர்த்து நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில், மக்கள் இடையூறைத் தவிர்க்கும் பொருட்டு திரிபுரா அரசு பங்கு பெற வில்லை. கம்யூனிஸ்ட் கட்சியும் அதற்காக மாணிக் சர்க்காரை ஒன்றும் கூறவில்லை. இந்த மாதிரி காங்கிரஸ் அல்லது பிஜேபி ஆளும் மாநிலங்களில் நடக்க முடியுமா?

தமிழகத்தில் எந்த  கம்யூனிஸ்ட் MLA மீதாவது ஒரு ஊழல் வழக்கு உள்ளதா? தேர்தல் இலாபத்திற்காக, தா.பாண்டியன் மீது திமுக போட்ட வழக்கு என்னவாயிற்று என்று கருணாநிதிக்குத் தான் தெரியும்.

எளிமையும் சொத்து சேர்ப்பதில் ஆசையும் இல்லாத தலைவர்கள் மட்டுமே நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல முடியும். அவர்களே இந்திய இளைஞர்களுக்கு வழி காட்ட முடியும். சொத்து சேர்க்கும் தலைவர்களுக்கு அடியில் இருக்கும் தொண்டர்கள், தலைவர்களானதும் சொத்து சேர்ப்பதை ம்ட்டுமே யோசிப்பர், நாடும் முன்னேற்றமும் இரண்டாம் மூன்றாம் பட்சம் தான்.

காலத்தினால் வென்ற தலைவர்களிடம் (காமராஜர், கக்கன், பெரியார், காந்தி...) எல்லாம் இருந்த ஒரே குணம் எளிமையும் நேர்மையும். எளிமையாக இருக்க பழகிக் கொண்டால் நேர்மை தானாக வ்ரும். நேர்மை இருந்தால் நாடு முன்னேறும். இந்த இரு குணங்கள் இல்லாமல் அரசியலில் இருக்கும் தலைவர்களினால் நாடு பின்னேற்றம் மட்டுமே அடையும். முன்னேற்றம் அல்ல. 

இன்றைய காலக்கட்டத்தில் இந்த இரு குணங்கள் உடைய தலைவர்கள் அதிகம் உடைய கட்சியைக் கண்டுபிடித்து வாக்களியுங்கள். நீங்களும் என்னைப் போல கம்யூனிஸ்ட்களை ஆதரிப்பீர்கள்.

Saturday, March 13, 2010

India means exploitable?

During this republic day of 2010, I saw the movie "Gandhi" that was released in 1982. Ben Kingsley played the role of Gandhi. I was more inclined towards the historical truths than the characterization. And from the film, I had two surprises:
  1. A 1982 movie is able to give me explanations for events happening today. 22 years had not at all made any difference.
  2. A new answer to "Who got the independence for India?"

Let’s talk about the second point first. Not sure what you guessed; but the answer i am looking for is "British ". Yes it was British who got the independence for India than Gandhi or any other Indian freedom fighters. British government had strong belief on their rules and regulations that the framework they had developed accommodated rules for every living in their republic. If British government want to kill a dog, they will do it only after proper investigations and ensure rules been followed in the activity. And how does this helped in achieving independence?

Though Gandhi and others made a lot of attempts for getting independence, it could not have been an uphill task for British to kill all those main stream leaders and say “No” to independence and deny all basic rights to Indians (as happening in Sri Lanka). But British, as a rule follower, put them in jail just for the reason that they were causing nuisance to the government functioning. British wanted to fight or use arms against only persons who involved in terrorism. And so, they invited all moderate freedom fighters for talks and explained them the reason for why India cannot be given independence. In the movie Gandhi, British explain the Indian freedom fighters, “Ok, you are asking for independence, but for which community? Independence for Poor India or Rich India or Muslim India or Hindu India or Brahmin India or lower caste India? Your country is split in multiple dimensions and you will not be able to govern yourselves”. If you see the explanation, you will not be able to deny it bluntly out of patriotism. We had our weaknesses and that’s why we were under foreign kingdom for more than 200 years. 

And then Gandhi was a thinking person. He understood that the hurdle for getting independence was not British themselves but it was the mentality of Indians. He chose a different path which can be followed by every Indian irrespective of their body strength / talents. “Don’t do anything against British, just stay calm when they hit you or abuse you”. This was very easy to do when compared to learning military skills, handling arms and fighting against British in war. Also, by going the way of Ahimsa, Gandhi ensured that no single person can claim the credit and it was a collective effort and showed the British we are united. And British, seeing the unity and prolonged struggle, thought it is better to give independence rather than wasting their time to control the processions / freedom struggles when they had bigger things (world wars etc.,) to deal with.

But even in the Gandhian community, there were some people who were not for this unity. Not sure of the reason, but the reason may be personal gain also. No offence met, as nobody can clearly say a reason for an event which happened 80 years ago. Mohamed Ali Jinnah was asking for a separate country for Muslim community to the British when Indian freedom fighters were called for talks. That time, Gandhi says to Jinnah, “Hey Jinnah, you are asking for a country of Muslims. But how will you collect all Muslims in India and take them to Pakistan? Muslims are not just present in the north western India? They are also present in East, South Indian parts.” Jinnah says, “You take care of your muslims, I will take care of my Muslims”. I really do not understand Why Jinnah did this partition? He was saying all these things when there were lot of Muslims ready to follow Gandhi, like Frontier Gandhi Khan Abdul Ghaffar Khan etc., (It was not shown in the movie. But it seems later Jinnah admitted he erred by dividing India and Pakistan)

Then again, Gandhi offers a deal to Jinnah. “Ok Jinnah, you are worried about the security of Muslims in India. I accept your arguments. I wanted Nehru to become the Prime minister of free India. You can take that position as well. Also, you appoint all Muslims as ministers and head of all departments. But don’t go for this partition.” Even then Jinnah did not accept it and Nehru was also not speaking at this occasion. That’s how the movie shows. Not sure what Nehru thought in his mind during this conversation. But what I feel is, had Nehru was not inclined in becoming the first Prime minister of India, he would have joined Gandhi in offering the post to Jinnah. But he had been quiet and heads down when Gandhi offered this to Jinnah. Not sure of the reason again, probably Nehru wanted to hold that position.

Though we got independence, it was not attained like how Gandhi expected. It was independence with partition and Gandhi was not for it. As he predicted, there were lot of communal riots between Muslims and Hindus after independence. Then he starts fasting and just because of the revere people had for him, the riots come to an end. And Nehru comes to say Gandhi that riots have come to an end. And Gandhi says, “If it has stopped for the sake of not allowing an old man to die, then it is not over yet. I want Hindus and Muslims to live together as brothers and sisters and for that there should be in change in the minds of the people”.  But that change has not happened until today and every year we get some proof for this (Babri Masjid, Best bakery, Sabarmathi train, 26/11 etc.,). :(

From all these incidents seen in the movie Gandhi, Indians had always wanted to live divided, be selfish, and claim credit for what they have done, register the activity in the world and hence attain fame. In the earlier periods, they wanted to do this with a lot of honesty and claim credit only for what they have done. But now, it is no more like that. And this does not mean we lack in skills. We have one of the best resource set of the world but the thing is everyone is selfish here and wishes to win by any means. Earlier it was honest and now it is no more that way and the mantra is “Win at any cost”. That’s why only Indian born people can win Nobel’s but not Indian residents.

Exploitation has become a habit of everyday life and you know why? The same reason of selfishness in claiming credit and attain fame. Now that the competition is more, the honesty has disappeared which means, they are ready to claim credit for what others have done also. Especially after corporate culture has come into India through the globalization concepts, every corporate is using the same policy. “Divide and rule” and Indians will start fighting for themselves for claiming credit and attaining fame. This is the reason if you go and ask any of the IT guy, he / she does not want to stay for long in the IT field. They just want to get out after earning for settlement in a calm place. And for earning soon, they want to stay at onsite for long and for that they invent new ways of exploitation. So, the exploitation methods are getting created exponentially and beheading the nation’s talent pool. And poor countries like India is the best place for exploitation as salaries in thousands are very bigger. Neither the government nor the corporate want to address this exploitation problem as they themselves know this is the nature of corporate. 

And the saddest part is, the leaders are no more exception to exploitation. Difference between earlier era and now is, there had been “Not sure of the reasons” earlier but now it is “Explicit”. Everything is for personal gains and leaders themselves want to exploit people to win the elections. Earlier, the people were exploited by British just because they were selfish and divided. So leaders like Gandhi preached them unity and tried to eradicate exploitation. But today, leaders encourage exploitation by providing everything for free and try to capture the vote banks. Again people are exploited. Lazy and people who don’t want to work are the ones who are benefited out of these sops and money given during elections. Working and honest people are deprived because of the inflation rate and higher costs for education. But again, who will not accept something if it is given for free? For lazy and non working people, food is the primary thing and hence they will welcome sop. And so they will vote the government which provides them. And the government will continue providing free sop and spoil the growth as it will increase the count of lazy and non-working people. It is a catch-22 and unless government stops it, it cannot come to an end. Why will government stop it as it is very easy this way to attain power rather than helping the people get education, become independent, vote with their own analysis? People welfare is secondary for politics now and primary is to attain power and this phenomenon of going behind power started when Jinnah initiated partition and Nehru did not offer his words supporting Gandhi. Good or bad, it has happened and now it is very difficult to revert back and come out of exploitation.

So, Independence has just resulted in shift of exploitation responsibility. It has been shifted from British to in-house. As Gandhi said, unless people’s minds change and wish to come out of exploitation, it is never possible. And this cannot be achieved by rules and regulations. Not sure how else we can achieve it. Again a Not sure :) and probably we are going back.

Saturday, January 09, 2010

எனக்கு நானே கடவுள்!!!

கவிதையாக இதை எழுத வேண்டும் என்று ஆசை எனக்கு..ஆனால் பதிவாக எழுதுகிறேன்...

காலைக் காட்சிகள் எனக்கு மாறிவிட்டன..பறவைகளின் சத்தம், மூடப்பட்ட கடை ஷட்டர்களின் முன் இருக்கும் பால் பாக்கெட்டுகள், மார்கழி கோலங்கள் போடும் அம்மாக்கள், பரவலாக 30 - 40 வயது உள்ளவர்களின் காலை வாக்கிங், டீக்கடைகளில் கூட்டம், தூசி பறக்காத ரோடுகள், ரோடுகளில் மிகவும் குறைந்த வண்டிகள் நன்றாக தான் இருக்கிறது.. காலையில் 6 மணிக்கு எழுந்து 7.20க்க்கு அலுவலக பஸ்ஸைப் பிடிப்பதற்கு....ஆனால் மாலையில் வீடு வரும் போது மணி 8 ஆகி விடுகிறது என்பதை நினைத்தால் தான் கவலை..மீதம் இருக்கும் 3 மணி நேரத்தில் நான் செய்ய வேண்டியவை ஏராளம் ஏராளம்...

வாரம் ஒரு முறை வலைத்தளத்தில் பதிய வேண்டும் என்ற 2010 புத்தாண்டு உறுதிமொழிக்குக் கரு யோசித்தல்; காதல் வாழ்க்கை; அதற்கு குடும்பத்தில் ஒத்துழைப்பு பெறுதல்; தினமும் தினமணி, டைம்ஸ் ஆப் இந்தியா என்று இரு செய்திதாள் வாசித்தல்; உடற்பயிற்சி; நாங்கள் நடத்தி வரும் அறக்கட்டளைக்கான வேலைகள்; அதற்கு ஒரு வலைத்தளம் உருவாக்குதல்; அடுத்து அமெரிக்கா எப்படி செல்வது என்று யோசிப்பது (அ) புதிய தொழில் ஒன்றை நாமே எப்படி ஆரம்பிப்பது; அலுவலகப் பணிகள்; வலையில் மேய்ந்து புதிய விடயங்கள் படித்தல் / அறிவு சேர்த்தல்; பங்குச் சந்தை; வரவு செலவு கணக்கு ; டிவி; நல்ல சினிமா தரவிறக்கம் பண்ணி பார்ப்பது (Schindler's list ரொம்ப நாளாகக் இருக்கிறது முழுதாகப் பார்க்காமல்); ஆனந்த விகடன், ஞானி மற்றும் "five point someone", "one night at the call center" and "zen and the art of motorcycle" படித்தல்; இவை படித்த அப்புறம் அருந்ததி ராயின் நூல்கள், "the white tiger" படிக்க வேண்டும்...ஆப்பிள் ஆரஞ்சு மற்றும் பிற மளிகை சாமான்கள் வாங்குதல்; துணிகளைத் துவைத்தல்; இஸ்திரி பண்ணுதல்; வீட்டை ஒழுங்குப்படுத்துதல்; இரயில் டிக்கெட் பதிவு செய்வது...

இவ்வளவும் செய்வதற்கு எனக்கு இருப்பது, வார நாட்களில் 3 மணி நேரம் (5*3 = 15) + சனி(24) + ஞாயிறு(24) = 58 மணி நேரம்.. கண்டிப்பாக நிறைய ஊக்கம் தேவைப்படுகிறது....நான் என்னையே கேட்டுக் கொள்கிறேன்.. நிறைய ஊக்கம் வேண்டுமென்று. இதை கடவுளிடம் கேட்பதை அவரும் விரும்ப மாட்டார். எனக்கு நானே கடவுள்!!!

Saturday, December 26, 2009

தலைப்பில்லை (ஆனால் பிரிவுண்டு)

"அலுவலகம் - என் வாழ்வில் வருவதற்கு முன்னரே நான் 21 வருடங்கள் வாழ்ந்து விட்டேன். வெறும் 6 வருடங்கள் 6 மாதங்கள் 5 நாட்கள் மட்டுமே நான் சென்று வந்த ஒரு இடத்தின் பிரிவு எனக்கு பெரிய பாதிப்பு ஏற்படுத்தும் என்று எனக்கு தோன்றவில்லை. அது மட்டுமில்லாமல், கடந்த சில மாதங்களாக என்னுடைய பணியும் எனக்கு நிம்மதி தரவில்லை. வேறு பணியைத் தேடி கொண்டு தான் இருந்தேன். ஆதலால் நல்ல ஒரு வேலை கிடைத்ததில் மகிழ்ச்சி தான். ஆதலால் பிரிவு என்னைப் பாதிக்கும் என்று நான் நினனக்கவில்லை. "

கயத்தாரில் இருந்து நாகர்கோவிலுக்கு அப்பாவின் பணி மாற்றம் காரணமாக பள்ளி மாறிய போது, பிரிவு என்றால் என்னவென்றே தெரியாது. நாகர்கோவிலில் 2 முதல் 9 பாதி வரை படித்து விட்டு மீண்டும் அப்பாவின் பணி மாற்றம் என்னைத் திருநெல்வேலி கொண்டு வந்தது. அப்பொழுதும் கண்ணீர் வரவில்லை. ஆனால் கண்டிப்பாக கவலையானேன். என் நண்பர்களான தேனு (தேனப்பன்), அபினவ், ஹரிஷ், ஸ்ரீராம், சந்தியா, Jaffrin (இந்த பெயரைத் தமிழில் எழுதினால் கண்டிப்பாக நான் நினைத்த மாதிரி நீங்கள் வாசிக்க மாட்டீர்கள் :) ), சுமி போன்றவர்களைப் பிரிய மிகவும் கவலைப்பட்டேன். ஆனாலும் அந்த கவலை மனதுக்குள்ளே மட்டும் தான் இருந்தது. திருநெல்வேலி சென்ற பின்னர், கடிதங்கள் எழுதி எங்கள் நட்பு தொடர்ந்தது. கல்லூரி முடியும் வரை அந்த கடிதங்களை நான் வைத்தும் இருந்தேன். :)

9-12 வகுப்புகள் திருநெல்வேலியில். கல்லூரி கோவையில். என் கூடவே கிரிக்கெட் விளையாடிய மற்றும் படித்த நெருக்கமான நண்பர்கள் (அருணாச்சலம், பாலா, திருஞானம், பிரேம், கார்த்திக்) யாரும் கோவை வரவில்லை. மீண்டும் பிரிவு. ஆனால் இந்த முறை அப்பா அம்மா அக்காவையும் பிரிய வேண்டுமே!! நன்றாக ஞாபகம் இருக்கிறது. திருநெல்வேலியில் வீட்டில் sofa பக்கத்தில் இருந்துக் கொண்டே நான் Aristocrat (புதிதாக அப்பா வாங்கி கொடுத்தார்கள்) பெட்டியில் துணி எடுத்து வைத்து கொண்டிருந்தேன். இந்த தடவை கண்கள் பனித்தது. கண்ணீர் வந்தது. அப்பொழுது தான் தெரிந்தது பிரிவு என்றால் என்னவென்று. என் குடும்பத்தினர் மீது நான் வைத்து இருந்த அன்பும்..

பின் கல்லூரி பிரிவு. கோவை இரயில் நிலையத்தில் நான், பிரேம், ஜெய், விஜே, லான்சர், ஆர்த்தி, இந்திரா அழுதுக் கொண்டிருந்தோம். கல்லூரிக்கு வந்தது போலவே, அலுவலகத்திலும் என் நெருங்கிய நண்பர்கள் யாரும் என் கூட வரவில்லை லான்சரைத் தவிர. மீண்டும் பிரிவு.. அலுவலகப் பணி காரணமாகவும் முன்னேற வேண்டும் என்ற துடிப்பும் என்னைப் பிரிவுக் சோகத்தில் இருந்து பிரித்தது. எனினும் கவலையுடன் ஒரு மின்னஞ்சல் அனுப்பினேன் அந்த பிரிவு என்னை மிகவும் பாதித்து விட்டது என்று. அந்த மின்னஞ்சல் இன்னும் இருக்கிறது என்னுடைய தொகுப்பில்.

61/2 வருடங்கள் ஆகிவிட்டது பிரிவைச் சந்தித்து..

அலுவலகம் - என் வாழ்வில் வருவதற்கு முன்னரே நான் 21 வருடங்கள் வாழ்ந்து விட்டேன். வெறும் 6 வருடங்கள் 6 மாதங்கள் 5 நாட்கள் மட்டுமே நான் சென்று வந்த ஒரு இடத்தின் பிரிவு எனக்கு பெரிய பாதிப்பு ஏற்படுத்தும் என்று எனக்கு தோன்றவில்லை. அது மட்டுமில்லாமல், கடந்த சில மாதங்களாக என்னுடைய பணியும் எனக்கு நிம்மதி தரவில்லை. வேறு பணியைத் தேடி கொண்டு தான் இருந்தேன். ஆதலால் நல்ல ஒரு வேலை கிடைத்ததில் மகிழ்ச்சி தான். ஆதலால் பிரிவு என்னைப் பாதிக்கும் என்று நான் நினனக்கவில்லை. மனிதர்கள் முக்கால் வாசி தப்புக் கணக்கு தான் போடுகிறார்கள் கஜினி நயன்தாரா போல். (கஜினி பார்த்துக்கொண்டே எழுதுவதால் இந்த உவமை :) )

கடைசியாக 23 DEC 2009 ப்ரவீன், கெளசல்யா, (காயத்ரி பார்க்க வில்லை ஊருக்கு போயிருப்பதால்) ரபீக்கைப் பார்த்து விட்டு வந்ததோடு முடிந்தது என் TCS வாழ்க்கை.. அன்று இரவு தான் 61/2 வருடங்கள் சந்திக்காத பிரிவுச் சோகம் என்னைத் தாக்கியது.. உணர்ந்தேன் நாளை TCS 5 மாடியில் உணவில்லை.. அங்குள்ள மேசைகளில் அமர்ந்து கதை பேச முடியாது. அடுத்த கம்பெனி போனாலும் மேசை தான் இருக்கும். ரபீக், காயத்ரி, கெளசல்யா,தீபா,ப்ரவீன் இருக்க மாட்டார்கள்.. ஆறுவோடு கீழே போய் டீ கிடையாது.. கமல் ஜெகன் இடத்திற்கு போய் TCSல் என்ன நடந்துக் கொண்டு இருக்கிறது என்பதைப் பற்றிய உரையாடல் கிடையாது.. கிருபாவிடம் பேசுவதற்கு TCS சம்பந்தமான விடயங்கள் இருக்காது.. கேண்டீன் நிர்வாகத்தோடு சண்டைகள் இனிமே இல்லை (யார் சந்தோஷப்படுகிறார்களோ இல்லையோ பாலிமர் மக்கள் கண்டிப்பாக). இவை யாவும் யோசிக்கும் போது மிகவும் வருத்தமாக இருந்தது, இருக்கிறது, இருக்கும்.. ஆனால் என்ன பண்ணுவது?

பள்ளி நண்பர்களைப் பிரிந்ததால் தான் கல்லூரி நண்பர்கள் கிடைத்தார்கள், B.E. பட்டம் கிடைத்தது.. கல்லூரியைப் பிரிந்ததால் தான் TCS மற்றும் பிற நண்பர்கள் கிடைத்தார்கள்.. எனவே இந்தப் பிரிவும் எனக்கு ஒரு வெற்றியாகவும் மேலும் நண்பர்கள் உண்டாக்கும் ஒரு வாய்ப்பாகவும் மாற வேண்டும் என்பதே என் விருப்பம். பார்க்கலாம்.. அடுத்த பதிவில் புது கம்பெனி எப்படி இருந்தது என்று?


பி.கு: இதற்கு என்ன தலைப்பு என்றே தெரியவில்லை.. எனவே தான் "தலைப்பில்லை" என்பதே இதன் தலைப்பு..

Sunday, November 15, 2009

பாரதியார் கவிதை

தேடிச் சோறு நிதம் தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையனப்பின் மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ

- மகாகவி பாரதியார்

Monday, May 18, 2009

நாம் மனிதர்களா?




முடிந்து விட்டது என்று தான் நினைக்கிறேன். ஈழத்தமிழன் தன் கனவை கனவாகவே தான் வைத்திருக்க வேண்டும் போலும். பெருபான்மை தமிழ் நாட்டு தமிழர்களிடம் மானம், சொரணை
, உணர்வு, பற்று எதுவும் கிடையாது என்பது தெரிந்தது தான் என்றாலும் மீண்டும் 8 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்ற பின் அது ஊர்ஜிதபடுத்தப் பட்டுள்ளது.

இப்படி போன்ற ஒரு இரத்த களறி நடந்து முடிந்து இருக்கும் போது, கலைஞர் அலைவரிசையில் தலைப்பு செய்தி "கலைஞர் டெல்லி பயணம்! சோனியாவுடன் பேச்சு வார்த்தை". இதை நான் கலைஞரைக் குறையாகச் சொல்லவில்லை. இதே இடத்தில் யார் இருந்தாலும் இதை தான் செய்து இருப்பார்கள். இவர்களுக்கெல்லாம் அரசியல் செய்ய ஒரு பிரச்சினை வேண்டும். இந்த தடவை அது ஈழமாகி விட்டது. புத்திசாலிகள் தமிழ்நாட்டில் உள்ளனர் அதனால் தான், இவர்கள் யாரையும் நம்பாமல், யார் அதிகமாக பணம் கொடுத்தார்களோ, அவர்களுக்கு தான் எங்கள் ஓட்டு!!. தமிழ் நாட்டில் தான் ஓட்டு வாங்கப் படுகிறதே!..

நண்பர்களே! நன் தலைவர்களிடம் மனிதம் இருக்கிறதா ஏன் நம்மிடம் இருக்கிறதா என்று சிறிது யோசியுங்கள் ஒரு பரிசோதனை செய்யலாம்..."படுகாயமடைந்த 25 ஆயிரம் தமிழர்கள் மருத்துவ பராமரிப்பு இல்லாமல் பரிதாப மரணம்" இது தேர்தல் நடந்த அதே நாளில் இலங்கையில் நடந்தது. ஆனால் நாம் ஒன்றும் செய்ய வில்லை. எப்பொழுதும் போல் உண்டு உறங்கி எழுந்து அந்த நாளைக் கழித்து விட்டோம். உங்களுக்கு செய்தி தெரியாமல் போகட்டும். ஆனால் தெரிந்து இருந்தால், அன்று ஓட்டு போட்டிருந்தால், அதுவும் காங்கிரஸ்க்கு ஓட்டு போட்டிருந்தால் நீங்கள் மனிதன் இல்லை.. மிருகம் தான். சரி காங்கிரஸ் தான் இந்த போரை நடத்துகின்றது என்பதற்கு தான் என்ன ஆதாரம் என்று நீங்கள் கேட்டால், ஒரு சின்ன மாற்றம்! நீங்கள் மனிதன் தான் ஆனால், கடைந்தெடுத்த முட்டாள்!

மன்னிக்கும் குணம் தான் மனித குணம் அது தொண்டர்களிடம் இருக்கிறதோ இல்லையோ,
தலைவர்களிடம் கண்டிப்பாக வேண்டும். ஆனால் நம் தலைவர்களிடத்தில் இருப்பது, பழி வாங்கும் குணம். குற்றம் செய்தவர்களை ம்ட்டுமல்ல, அவர்களைச் சார்ந்தவர்களையும். இவர்கள் மனிதர்களா? சரி விடுங்கள்!!

வேறென்ன சொல்ல? தோல்வியுற்றவர்களால் புலம்ப தான் முடியும். நியாயமாக இருப்பவர்கள் இந்த காலத்தில் தோல்வியை மட்டுமே பெரும்பான்மையான தடவைகள் சுவைக்க முடியும். அதனால் தான் உலகெங்கும் புலம்பல்களும் சோகங்களும் மட்டுமே நிறைந்து இருக்கின்றன. இன்று இந்த புலம்பல் போதும். இன்னும் வெற்றியைப் பார்க்க நிறைய
சோகங்கள் உள்ளன... அதற்கு மிச்சம் வைக்கிறேன்...காத்திருக்கிறேன் வெற்றிக்காக!! ஆனால் வெற்றி நிச்சயம்..


Thursday, April 09, 2009

பேரணியாம் பேரணி!!

மீண்டும் பேரணி. எதற்காக? நாங்களும் அக்கறையோடு தான் இருக்கிறோம் ஈழத் தமிழர்கள் மீது என்று காட்டிக் கொள்ள. இது அனைவருக்கும் தெரியும் தானே! ஏன் காட்டிக் கொள்ள வேண்டும்? தேர்தல் ஆதாயத்திற்காக.. சரி அரசியல்வாதிகளையும் அரசியல் கட்சிகளையும் பற்றித் தெரிந்தது தானே? ஆனாலும் இதில் பங்கேற்கும் தொண்டர்களை என்ன சொல்ல?

அரசியல்வாதிகளைக் குறை கூறி என்ன பயன்? இன்று பேரணியில் பங்கேற்கும் தொண்டர்களில் எத்தனை பேர் உண்மையான உணர்ச்சியோடு, தமிழர் பாசத்தோடு நடக்க போகின்றனர். சும்மா நேரம் போகாமல் சில பேர், காசுக்காக சில பேர் என்று கூடுபவர்கள் தானே இவர்கள். ஆதலால் மக்களே ஈழத் தமிழர் நலனில் அக்கறைக் கொண்டு இருக்கும் தமிழர்கள் தமிழ்நாட்டில் சொற்பமே! சும்மா சொல்லிக் கொள்ளலாம்..போர் நிறுத்தம் ஏற்படாவிடில் தமிழகம் கொந்தளிக்கும் என்று. எல்லாம் வாய் ஜாலம். ஒன்றும் நடக்காது...

கட்சி பாகுபாடு இன்றி கலந்து கொள்ள வேண்டுமாம். கலந்து கொண்டால், போர் நிறுத்தம் ஏற்பட்டு விடுமா? தமிழர்கள் காப்பாற்றப் படபோகிறார்களா? எல்லாம் தேர்தல் நாடகம்.

இங்கு பேரணி நடத்தாமல் இந்திய அரசை விட்டு போர் நிறுத்தம் செய்ய சொல்லலாமே, அது மாட்டோம். ஏனென்றால் காங்கிரஸ் அதை என்றும் செய்யாது. அப்படியென்றால் விட்டு விட முடியுமா? அதுவும் முடியாது. தேர்தலில் மக்கள் ஏதேனும் ஆப்பு தந்துவிட்டால் இருக்கிற மாநில ஆட்சியும் போய் விடுமே?

எனவே தான் பேரணி. இதற்காக நான் திமுகவை மட்டும் குறையாகக் கூறுகிறேன் என்று எண்ண வேண்டாம். இங்குள்ள அனைத்து அரசியல்வாதிகளுக்குமே இந்த பிரச்சினை தீர்க்க வழி தெரியாது. எனவே இவர்களை நம்பி பயன் இல்லை. இது அவர்களுக்கும் தெரியும். அப்படியென்றால் எதற்காக பேரணி? மக்களிடம் தேர்தலுக்காக ஆடும் நாடகங்கள் தான் இவை.

மக்களே! தீர்க்க முடியாத பிரச்சினை என்றால், அரசியல்வாதிகள் சொல்ல மாட்டார்கள். இப்படி தான் உப்பு பெறாத பேரணிகள், விளக்க கூட்டங்கள் நடத்தி நம்மை ஏமாற்றுவார்கள். கடைகளில் 1 ரூ ஏமாற்றினால் கொதித்து எழும் நீங்கள், நம்மை ஏமாற்றுவதையே தொழிலாகக் கொண்ட அரசியல்வாதிகளை என்ன செய்ய போகிறீர்கள்? என்க்கும் தெரியும். ஒன்றும் பெரிதாக செய்ய முடியாது என்று. ஆனாலும் சிறிதாக ஒன்றே ஒன்று செய்ய முடியும். நமது ஓட்டு. அதை போன தடவை திமுக கூட்டணிக்குப் போட்டீர்கள் என்று இந்த தடவை அதிமுக கூட்டணிக்கோ மூன்றாவது அணிக்கோ போடுவதற்கு பதில் "எனக்கு யார் மீதும் நம்பிக்கை இல்லை" என்றுத் தோன்றினால், ஓட்டு போடாமல் இருந்து விடாதீர்கள். 49 ஓ வை பயன்படுத்துங்கள். 49 ஓ என்பது எந்த வேட்பாளர் மீதும் நம்பிக்கை இல்லை என்று சொல்வது போலாகும். வாக்கு சாவடி அதிகாரி 49 ஓ பதிவு செய்ய உதவி செய்வார்.


எனவே மக்களே! தயவு செய்து உங்கள் ஓட்டுக்களை தரமானவர்களுக்கே போடுங்கள். ஜே.கே ரீத்திஷ், நெப்போலியன், எஸ்.எஸ்.சந்திரன், மு.க.அழகிரி, இராஜ கண்ணப்பன் போன்றவர்களா நமது தமிழக பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் முன்னிறுத்தி தீர்க்க போகிறவர்கள்? தயவு செய்து சாதி பார்க்காமல், மதம் பார்க்காமல் வேட்பாளரின் தரத்தை மட்டும் பார்த்து ஓட்டு பதிவு போடுங்கள். தரம் இல்லையா 49 ஓ போடுங்கள்.

Saturday, March 21, 2009

மறக்க முடியவில்லை!!!

இன்று என் மனதை மிகவும் பாதிக்கும் படியாக ஒரு நிகழ்ச்சி நடந்தது. நான் எதிர்பார்க்க வில்லை. இப்படி ஒரு விடயம் நடந்தால் நான் இவ்வாறு பாதிக்கப் படுவேன் என்று.

மார்ச் 21 2009. என் அக்காவின் இளைய குழந்தை பிறந்த நாள். சரி, எல்லாரும் நல்ல நாட்களில்
பிறருக்கு உதவுகின்றார்களே நாமும் செய்வோமே என்று, இன்று காரபாக்கம் அருகில் உள்ள ஒரு இல்லத்திற்கு சென்றேன். போகும் போது என் நண்பரையும் கூட்டிக் கொண்டு போனேன். நண்பருக்கு மார்ச் 16 பிறந்த நாள். ஆதலால், அவரும் உதவ தயாராக இருந்தார். நாங்கள் கொஞ்சம் (70 பாகங்கள்) இனிப்பு (பால் பேடா) வாங்கிக் கொண்டு சென்றோம்.

காரபாக்கம் டிசிஎஸ் (TCS) அலுவலுகம் தாண்டி சென்றால், இடது பக்கத்தில் ஒரு கருணை இல்லம் உள்ளது. பைக்கை உள்ளே விட்டு நிறுத்தினோம். ஒரு பத்தடி தூரத்தில் இரு பெண்கள் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அவர்கள் சீருடை அணிந்திருந்தனர். இன்னும் கொஞ்ச தூரம் தள்ளி இருந்து கொண்டிருந்த இரு பெண்கள் நாங்கள் வருவதைப் பார்த்து, எங்களை நோக்கி வர ஆரம்பித்தனர்.

எங்களை அன்போடு வரவேற்றனர். நாங்கள் வந்த காரணத்தை அவர்களாகவே தெரிந்து கொண்டு, யாருக்கேனும் பிறந்த நாளா இல்லை வேறேனும் மகிழ்ச்சி தரக்கூடிய விடயம் நடந்துள்ளதா என்று கேட்டனர். நான் உடனே "எங்க அக்கா குழந்தைக்கு
பிறந்த நாள்" என்று கூறினேன். அப்படியே நாங்கள் கொண்டு வந்திருந்த இனிப்புக்களை அவர்களிடம் கொடுத்தேன். ஓ அப்படியா! நாங்க அவங்களுக்குகாக wish பண்ணி விட்டு pray பண்றோம் என்று கூறினர்.

அப்புறம், அவர்களைப் பற்றி பேசும் போது, அங்கு 180 குழந்தைகள் இருப்பதாக தெரிந்தது. இனிப்பு காணாதே என்று மேலும் ஒரு 500 ரூ எடுத்து கொடுத்தேன். எங்களுடன் பேசிக் கொண்டிருப்பவர்களைப் பற்றி கேட்டு கொண்டிருந்த போது, அவர்கள் இருவரும் அங்கு ஆசிரியர்களாக வேலை பார்த்து கொண்டிருப்பதாக தெரிந்தது. ஒருவருக்கு திருப்பத்தூர் என்று கூறினார்கள்.

சரி குழந்தைகளைப் பார்க்கலாம் என்று நினைத்தோம். ஆனால் அப்பொழுது அவர்களுக்கு தியான வகுப்பு நடந்து கொண்டிருந்தது. காத்திருக்கலாம் என்று முடிவு செய்தோம்.

தியான வகுப்பினில் ஒரு பையன் சேட்டை பண்ணிக் கொண்டிருந்தான் என அங்கு மேற்பார்வையிடும் ஆசிரியர் வெளியே கொண்டு வந்து விட்டார். ஏனோ தெரிய வில்லை அந்த பையனைப் பார்ப்பதற்கு எனது அக்காவின் இளைய குழந்தை போலவே இருந்தது. வெளியே வந்த பின்னரும், பையன் குறும்புகள் பண்ணிக் கொண்டுருந்தான். வகுப்பிற்கு உள்ளே எட்டி பார்த்து கொண்டிருந்தான்.

அவனை அருகில் கூப்பிட்டு என்னுடன் வந்த நண்பர் பேச ஆரம்பித்தார். அவன் பெயர் வேல்முருகன் என்று கூறினான். டிரவுசரில் உள்ள ஊக்கு பிய்ந்து இருந்ததால், மீண்டும் மீண்டும் அதை பிடித்து சரி செய்து கொண்டிருந்தான். வயது ஒரு 6 - 7 இருக்கும்.

அவன் கையைப் பிடித்து பேச ஆரம்பித்தார். ஏனோ என்னால் அவனோடு நன்றாக பேச முடியவில்லை. எங்களோடு பேசிக் கொண்டிருந்த ஆசிரியர்களில் ஒருவர் "அவன் கிட்ட அவங்க அம்மா phone number கேட்டு பாருங்க" என்று கூறினார். நண்பர் கேட்டார். வேல் முருகன் "0000" என்று ஆரம்பித்து சில எண்கள் கூறினான். அதைக் கேட்டு ஆசிரியர் "அவனுக்கு மட்டும் number எல்லாம் 0 ல தொடங்கும்" என்று சிரித்தார்.

என்னால் சிரிக்க முடியவில்லை. அவன் அம்மாவை அவனுக்கு தெரிய வில்லை என்று கவலைப் படுவதா? இல்லை அதையும் அவன் கண்டு கொள்ளாமல் விளையாட்டாக எண்களைச் சொல்கிறானே என்று அவனைப் பாராட்டுவதா என்று?

அதோடு அவன் அவ்வ போது தன் கை விரல்களுக்கு நடுவே சொரிந்து கொண்டே இருந்தான். பார்த்த போது, கொஞ்சம் ஆங்காங்கே பொரிந்து இருந்தது. அதுவே அவனைச் சொரிய வைத்தது. இதையெல்லாம் பார்த்து கொண்டே இருந்த போது, என் கண்களில் தானாக நீர் கோர்த்து கொண்டது. ஏனென்றே தெரியவில்லை.

பின்னர் அனுராதா என்ற இன்னொரு பெண்ணிடமும் பேசிக் கொண்டிருந்தோம். அதற்கு பிறகு வந்து விட்டோம். பயமாக இருந்தது இன்னும் கொஞ்ச நேரம் இருந்து பார்த்துக் கொண்டிருந்தால் அழுது விடுவோம் என்று.

இந்த குழந்தைகள் என்ன தவறு செய்தார்கள் இந்த மண்ணில் வந்து பிறந்ததைத் தவிர? அவர்கள் உடலிலுள்ள சிறு பிரச்சினைகளைக் கூட பார்த்துக் கொள்ள அவர்களால் முடியவில்லை. ஆனால் என் அக்கா குழந்தைக்கோ பிறந்த நாள் மட்டுமின்றி அனைத்து நாட்களிலும் எல்லா வித கவனிப்புகள். ஏன் இந்த முரண்பாடு? யாருடைய தவறு இது?

சரி எனக்கு தெரிந்தது ஒரு வேல்முருகன் அனுராதா தான். இன்னும் எத்தனையோ பேர் இதை விட மோசமான நிலையில் இருக்கிறார்கள். ஈழத்து மக்களையெல்லாம் நாம் சென்று பார்த்தால் மனம் நொந்து வாழ்க்கையின் மீது உள்ள பற்று போய்விடும் என்று நினைக்கிறேன். உலகிலேயே ஒருவர் கண்ணெதிரில் துன்பப்படும் போது, உதவ வேண்டும் என்று நினைத்தாலும், வழி தெரியாமலும், உதவி செய்யும் நிலையில் இல்லாமல் இருப்பது தான், மிகப் பெரிய தண்டனை. இதைப் பற்றி நினைத்துக் கொண்டு, நாட்டில் நடக்கும் நான் தான் பெரியவன் என்ற சண்டைகளும், வெற்றி மிதப்பில் மனிதன் செய்யும் அராஜகங்களையும் பார்க்கும் போது சிரிப்பு தான் வருகிறது.

இனிமேல் யாரேனும் உங்களிடம் வந்து கர்வத்தோடு பேசும் போது இதைப் பற்றிக் கூறி எப்படி இந்த குழந்தைகளின் பிரச்சினைகளைத் தீர்ப்பது என்று கேளுங்கள். அமைதியாக திரும்பிச் செல்வர்.

என்னால் முடிந்தது இவை தான்.

முன்பு நிறைய தடவை வெளியே சாப்பிட்டு ஒரு மாதத்திற்கு குறைந்த பட்சம் 1200 - 2000 ரூக்கு வெளியே சாப்பிட்ட நான் அதைக் குறைத்துக் கொள்ள முடிவு செய்தேன். மாதம் ஒரு முறை
வேல்முருகன் அனுராதா மற்றும் பிற குழந்தைகளைப் போய் பார்க்க வேண்டும் எங்களால் இயன்ற அளவு உதவி செய்வது என்று முடிவு செய்தோம்.

இதெல்லாம் போக, அந்த இரு பெண் ஆசிரியர்களை நினைத்துப் பாருங்கள். வேல் முருகனின் நம்பர் விளையாட்டை வேடிக்கையாக எடுத்துக் கொள்ளும் மன தைரியத்தை என்னவென்று சொல்வது? அவர்களைப் போன்றவர்கள் தான் உண்மையான வீராங்கனைகள், மன திடம் உள்ளவர்கள்.

Wednesday, October 01, 2008

அமெரிக்கர்கள் இந்தியாவின் வளர்ச்சியைக் கண்டு பயப்படுகின்றனரா?

ஆம் வந்து விட்டது.. இந்தியர்களைப் பார்த்து அமெரிக்கர்கள் அஞ்சும் காலம் வந்தே விட்டது. மென்பொருள் துறை, விண்வெளி ஆராய்ச்சி, அணு ஆயுதங்கள், தகவல் தொழில்நுட்பம் என இந்தியாவின் வளர்ச்சி உலகம் அறிந்தது தான். ஆனாலும் வெளிப்படையாக வாய் வார்த்தைகள் மூலமாக அமெரிக்க பிரதிநிதிகள் சொல்லி நான் பார்த்ததில்லை. ஆனால் இன்று படித்து விட்டேன்.

இன்று அமெரிக்க பாராளுமன்றத்தில் நடைபெற்ற அணுசக்தி ஒப்பந்த விவாதத்தில் வடக்கு டகோடா மற்றும் 'புதிய மெக்சிகோ' மாகாணங்களின் பிரதிநிதிகள் இந்த ஒப்பந்தத்தை எதிர்த்து பேசியுள்ளனர். வடக்கு டகோடா மாகாணத்தின் பிரதிநிதி பைரன் டார்கன், தன்னுடைய உரையில், இந்திய அணு உலைகளைப் பற்றி விஜயகாந்த் போல ஒரு எண்ணிக்கை ஆராய்ச்சியே நடத்தி உள்ளார்.

"இந்தியாவில் உள்ள மொத்த அணு உலைகளின் எண்ணிக்கை 22. அதில் அமெரிக்காவிடம் இருந்து எரிபொருள் இறக்குமதியாக போகும் உலைகள் 14. மீதி இருப்பவை 8. இந்த எட்டில் இந்தியா அணு ஆயுதங்கள் உற்பத்தி செய்யலாம் ஏனெனில் இவை அணுசக்தி கட்டுப்பாட்டுக்குள் வராது. அணுஆயுத பரவல் தடை சட்டத்தில் கையெழுத்திடாமல், ஏற்கனவே அணு ஆயுதங்களைச் சோதனை செய்துள்ள ஒரு நாட்டிற்கு இவ்வாறு ஒத்துழைப்பு அளித்து, மேலும் அவர்களை அணு ஆயுதம் தயாரிக்க உதவும் ஒரு ஒப்பந்தத்தை இவ்வளவு அவசரமாக விவாதிக்க வேண்டுமா?" இது பைரன் டார்கன் இன்று பேசிய உரையின் சாராம்சம்.

ஜெஃப் பிங்கமேன், 'புதிய மெக்சிகோ' பிரதிநிதி, இந்தியாவைப் பற்றி ஒரு பாராட்டு பத்திரமே வாசித்து விட்டார்."1960, 1970 களில் இருந்து வந்த இந்தியா வேறு. இப்பொழுதுள்ள இந்தியா வேறு. கண்டிப்பாக இந்தியா தொழில்நுட்பத்தில் ஒரு முன்னோடி நாடு தான் என்பதில் சந்தேகம் இல்லை. எனவே அமெரிக்கா தொழில் நுட்பத்திற்காக இந்தியாவுடன் கைகோர்க்க தான் வேண்டும். இதற்காக அதிபர் எடுத்துள்ள முயற்சிகளை நான் பாராட்டுகிறேன். ஆனால் இந்த காரணங்களுக்காக நம் அணு சக்தி கொள்ககைகளை மாற்றுவது தவறான செயலாகி விடும். இந்த ஒப்பந்தம், அணுஆயுத பரவல் தடை சட்டத்தில் கையெழுத்திட்டிருந்தாலும் தனக்கென பிரத்யேகமாக அணு கொள்கை வைத்துக் கொள்ள விரும்பும் இரான் போன்ற நாடுகளுக்கும், அணுஆயுத பரவல் தடை சட்டத்தில் கையெழுத்திடாமல் இருக்கும் பாகிஸ்தான், வட கொரியா, இஸ்ரேல் நாடுகளுக்கு மோசமான முன்னுதாரணமாகி விடும். மேலும் நம்முடைய நிலையை அணுஆயுத பரவல் தடை சட்டத்தில் கையெழுத்திட்டுள்ள தென் ஆப்பிரிக்கா, பிரேசில் மற்றும் தாய்வான் நாடுகளுக்கு நியாய படுத்த முடியாமல் போய் விடும். எனவே இதை அனுமதிக்க கூடாது."

அணு ஆயுத ஒப்பந்தம் கையெழுத்தாகுமோ இல்லையோ, இந்தியாவை பற்றி அமெரிக்கர்களின் உண்மையான கருத்துக்கள் வெளி வருகின்றன. எனக்கென்னவோ இந்தியா வல்லரசாகும் காலம் அருகி விட்டது போல் தோன்றுகிறது....

Friday, September 26, 2008

கண்ணும் கண்ணும்

இன்று தான் இந்த படத்தை முதன் முதலாக பார்க்கிறேன். இப்படத்தைப் பார்த்து விட்டு அதைப் பற்றி எழுதாவிட்டால் அந்த கதை ஆசிரியருக்கு நான் செய்யும் ஒரு துரோகமாகவே நினைக்கிறேன். காரணம், அவ்வளவு ரம்மியமான அழகான யதார்த்தமான கதை. இந்த படத்தைத் திரையரங்கில் பார்க்காமல் கணிணியில் பார்த்து இயக்குனருக்குச் / தயாரிப்பாளருக்குச் சேர வேண்டிய இலாபத்தைப் பறித்ததற்காக வருந்துகிறேன்.

இந்த கதையை உங்களிடம் நான் சொல்ல போவதில்லை. கண்டிப்பாக இந்த படத்தை நீங்கள் பார்க்க வேண்டும். அதற்காக தான் இந்த பதிவு.

மிகுந்த நாட்களாகவே இது வரை யாரும் சொல்லாத ஒரு கதையை யாரேனும் படமாக எடுப்பார்களா என்று நான் பார்த்து கொண்டிருந்தேன். என் கனவு நனவானது இப்படத்தினால்.
முற்றிலும் புதிய கதை. இது வரை நாம் யாரும் கேட்டு பார்த்திராத மென்மையான காதல் கதை.

கதைகளில் முடிச்சு போடுவது யாவருக்கும் எளிது. ஏன் நாம் கூட போடலாம். கதை ஆசிரியரின் திறமை அதை லாவகமாக அவிழ்ப்பதில் தான் இருக்கிறது. அவிழ்ப்பதற்கு எவ்வளவு திறமை வேண்டுமோ, அதை விட பல மடங்கு திறம் மற்றும் துணிவு அந்த முடிச்சை அவிழ்க்காமலேயே கதையை முடிப்பதற்கு வேண்டும். அப்படி அவிழ்க்காமல் இருக்கும் போதும் பார்ப்பவர்களுக்கு அது நியாயமாக இருக்க வேண்டும். அது இந்த கதையில் உண்டு. இந்த துணிச்சல் இதற்கு முன்னர் நான் பாலசந்தரிடம் பார்த்து இருக்கிறேன் (அவள் ஒரு தொடர்கதை, மூன்று முடிச்சு...)


கதை மற்றும் காட்சியமைப்புகளில் யதார்த்தம். எதுவும் செயற்கையாக இருக்காது. அதற்கு நான் உத்தரவாதம். ஒரு வேளை திருநெல்வேலி பக்கத்து ஊர்களில் நடப்பதினால் அதில் இருக்கும் யதார்த்தத்தை என்னால் அதிகமாக உணர முடிகிறதோ என்னவோ? என்னுடைய கணிப்பு தமிழ்நாட்டில் இருந்து வந்த அனைவருக்கும் இது யதார்த்தமாகவே இருக்கும். குறை
காண விரும்புவோர்க்கு கதை நாயகன் மற்றும் நாயகி அறிமுகம் ஒரு நல்ல களம்.


இப்படத்தில் எனக்கு பிடித்தவை:
1) இயக்குனரின் பெயர் - ஒரு கிராமத்து பெயர் மாரிமுத்து
2) கணிணி காலத்திலும் கடிதம் மூலம் காதல் செய்வது.
3) கதையின் முடிச்சை அவிழ்ப்பதற்காக குடும்பத்தில் இருக்கும் நாயகன் மற்றும் நாயகி தவிர யாரோ ஒருவர் உண்மையைத் தெரியாமல் கேட்டு விட்டதாக காண்பிக்காமல் இருப்பது
4) காதலை விட மற்ற உறவுகளுக்கு (தந்தை-மகன், அண்ணன்-தங்கை எல்லாவற்றையும் விட நட்பு) முக்கியத்துவம் காட்டியது.
5) மனிதாபிமானத்தை கதை மூலம் நிரூபித்தது.
6) தமிழ் பேச்சு, தமிழ் சினிமா தரம் பேசும் தங்கர் பச்சான் கூட கவர்ச்சியைப் பயன்படுத்தும் போது, இந்த கதையில் பெரிய நடிகர்கள் யாரும் இல்லா விட்டாலும் நாயகியின்
கவர்ச்சியையோ, ஒரு பாடலுக்கு ஆடும் சிலரின் ஆட்டத்தையோ நம்பாத இயக்குனரின் நம்பிக்கை மற்றும் அப்படி இயக்க விட்ட தயாரிப்பாளரின் துணிச்சல்.

7) கடைசியாக வெற்றி படமாக வேண்டும் என்பதற்காக கதையின் முடிவை காதலர்க்கு சாதகமாக முடிக்காமல் இருப்பது..

இந்த படத்தின் மிகப் பெரிய பலவீனம் - இசை. அதை விட எரிச்சலூட்டுவது, இசையமைப்பாளர் தினாவுக்கு போடப்படும் பட்ட பெயர்.. (இசை அரசராம்).

படத்தைக் கண்டிப்பாக பாருங்கள்.. ஒரு நல்ல படைப்பை ஆதரியுங்கள்!!!

Wednesday, April 16, 2008

பிரியங்கா நளினியைச் சந்தித்தால் நமக்கு என்ன?

இரு நாட்களுக்கு முன்னர், பிரியங்கா காந்தி தன் தந்தையைக் கொன்ற நளினியைச் சென்று சிறையில் பார்த்துள்ளார். இதைப் பற்றி தான் ஊடகங்கள் இரு நாட்களாக பேசிக் கொண்டிருக்கின்றன. உச்ச கட்டமாக இன்று "ரேடியோ ஒன்" பண்பலைவரிசையில் இதை ஆதாரமாக வைத்து ஒரு போட்டி. எனக்கு மிகவும் பிடித்த வானொலி நடத்துனர் சுசித்ரா (முன்னால் மிர்ச்சி சுசி) தான் இதை முன்னின்று நடத்தினார் என்பதில் இன்னும் கொஞ்சம் கூடுதல் கவலை.

போட்டி இது தான். பிரியங்கா நளினியைச் சந்தித்த போது என்ன பேசி இருப்பார்? வானொலி நேயர்கள் கற்பனை செய்து கூற வேண்டும். மிகவும் ரசிக்க தகுந்த கற்பனைக்கு பரிசு. இதை விட கேவலமான ஒரு போட்டி இருக்க முடியுமா? இரு மனிதர்கள் தங்களுக்குள் கமுக்கமாக பேசியதை என்னவென்று யூகித்து கூறுவதற்கு பரிசு. பிறரைப் பற்றி வம்பு பேசுங்கள் என்று வெளிப்படையாக ஆதரித்து, அதற்கு பரிசும் உண்டு என்று ஊக்குவிக்கும் ஒரு போட்டி. தமிழ்நாட்டில் வேலை இல்லாதவர்கள் எத்தனை பேர் என்று அரசிற்கு எளிதாக கணக்கு எடுக்க ஒரு போட்டி.

எனக்கு நடத்துபவர்களை விட அதில் கலந்து கொள்கிறார்களே மக்கள் என்று தான் கவலை. இத்தனை பேர் தயக்கமின்றி அடுத்தவர்களைப் பற்றி புரளி பேச ஆயத்தமாக உள்ளனரே! தங்களது கற்பனை புரளியை தமிழகத்தில் உள்ள அனைவரும் கேட்பார்களே என்ற வெட்கம் கூட இல்லாமல்? அதைச் சுசி போன்றோரும் ஆதரிக்கின்றனரே.. தங்களுடைய பண்பலையின் விளம்பரத்திற்காக?

சுசி அவர்களே! இது நியாயமா? தங்களைப் போன்றோர் செய்கின்ற காரியமா இது?

Saturday, November 24, 2007

வைகோவும் நெடுமாறனும் என்ன சாதித்தார்கள்?

அண்மையில் விடுதலை புலி தலைவர் தமிழ்ச்செல்வன் இறந்ததற்காக சென்னையில் இரங்கல் கூட்டம் / ஊர்வலம் ஒன்றைத் தலைமையேற்று நடத்த முடிவு செய்து இருந்தனர், வைகோவும் நெடுமாறனும். ஆனால் தமிழக அரசு அனுமதி மறுத்தது. ஏன் என்று தெரியவில்லை. ஏதோ ஒரு காரணம் இருக்கட்டும். அதை விடுங்கள். இதற்கு என்ன செய்து இருக்க வேண்டும் இருவரும்? இரங்கல் ஊர்வலத்திற்கு பதிலாக வேறு ஏதேனும் ஏற்பாடு செய்து இருக்க வேண்டும்.

அதை விட்டு விட்டு, நாங்கள் ஊர்வலம் தான் நடத்துவோம் என்று, தடையை மீறி நடத்த முற்பட்டனர். எதிர்பார்த்ததைப் போலவே, அவர்கள் கைது செய்யப் பட்டனர். ஊர்வலமும் நடக்கவில்லை. வைகோ மற்றும் நெடுமாறனின் இந்த செயல்களினால், யாருக்கு என்ன லாபம்?

1. மக்கள் யாரேனும் இவர்களின் இந்த செயலினால்,
தமிழ்ச்செல்வனை நினைத்து பார்த்தார்களா?
2. இலங்கையில் தான் இவர்களின்
இந்த முயற்சியினால், ஏதேனும் மாற்றம் வந்ததா?

ஆனால், எவ்வளவு நஷ்டம் என்று ஒரு பட்டியலே இடலாம்:
1. ஊர்வலத்தில் பங்கேற்ற அனைவரையும் கைது செய்யத் தேவையான வாகனங்களின் போக்குவரத்து செலவு
2. பந்தோபஸ்து செலவு
3. பொது மக்களுக்கு அன்றாட வாழ்க்கைக்கு ஏற்பட்ட இடையூறுகள்
4. சாலையில் ஏற்பட்ட பதட்டம்
5. தேவையில்லாத கைது மற்றும் சிறையடைப்பு
6. நீதிமன்றம் மற்றும் வழக்கறிஞர்களுக்கு ஜாமீன் வேலை.

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். முதிர்ந்த அரசியல்வாதிகளான இருவரும், இதற்கு பதிலாக போராட்ட நுணுக்கத்தை மாற்றி, ஊர்வலத்திற்கு பதிலாக,
தமிழ்ச்செல்வன் பெயரில் ஏதேனும், மக்களுக்கு நற்பணி செய்து இருந்தால், உதவி பெற்ற மக்களும், தமிழ்ச்செல்வனை மறவாது இருப்பர். இவர்களுக்கும் ஒரு மன நிம்மதி கிடைத்து இருக்கும். அல்லது, நெடுமாறன் அவர்கள், சேர்த்து வைத்து இருந்த, இலங்கை தமிழர்களுக்கான உணவை இலங்கை கொண்டு செல்லும் முயற்சியில் ஏதேனும் முன்னேற்றம் காண்பதற்கு, பிரதமரைச் சந்தித்து பேசி இருக்கலாம். அதற்கு வைகோ பிரதமரிடம் தனக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி இருக்கலாம். இதைப் போன்று ஏதேனும் செய்வதை விட்டு, வெறும் ஊர்வலத்தினால் யாருக்கு என்ன பயன்? துன்பம் தான் அதிகம்..

எனவே, காலத்தினால் எல்லாம் மாறுவது போல், போராட்ட நுணுக்கங்களும் மாற வேண்டும். மக்களுக்கு புரியும் வகையில் போராட்டங்களும் மாற வேண்டும். அதை விட்டு விட்டு, தன்னுடைய அரசியல் எதிரி தன்னைத் தடுத்து விட்டாரே என்றெண்ணிக் கொண்டு, நான் நினைத்ததைத் தான் செய்வோம் என்ற மனப்பான்மை, வைகோ, நெடுமாறன் போன்ற நேர்மையான அரசியல்வாதிகளுக்கு அழகில்லை.

Thursday, July 05, 2007

ஒரு வருடம் முடிந்தது..

ஆம், நான் அமெரிக்கா வந்து இந்த மாதத்தோடு ஒரு வருடம் முடிந்தது. இந்த ஒரு வருடத்தில் நடந்தது பற்றித் தான் இந்த குறிப்பு. (blog ன் தமிழ் வார்த்தை என்ன? எனக்கு தெரியவில்லை)

உடனே தோன்றுவது, இந்தியாவில் இருந்த வரைத் தமிழில் எவ்வாறு blog செய்வது என்றுத் தெரியாமல் இருந்தது. அமெரிக்கா வந்து கற்றுக் கொண்டேன். என் சகப் பணியாளர்களும் தெரிந்து கொள்ள வகை செய்தேன்.

முதலில் பார்த்த இடங்கள் என்று சொல்லப் போனால், ப்ளோரிடா, மியாமி, நயகரா, சிகாகோ கூறலாம். ப்ளோரிடா பயணத்தை மறக்க முடியாது. universal studios, disney world, nasa அனைவரும் பார்க்க வேண்டிய ஒன்று. நயகராவைப் பார்த்து விட்டு, மனிதர்கள் சண்டை போடுவதையும், தங்களுக்குள்ளேயே ஏமாற்றிக் கொள்வதையும் பார்த்தால், சிரிப்பு தான் வருகிறது. அவ்வளவு பெரியது நயகரா. பார்த்த இன்னும் ஒன்று, சிவாஜி :). திரையரங்கம் சென்று பார்த்த வேறு படங்கள் : "வேட்டையாடு விளையாடு, போக்கிரி"

வேறு என்ன நடந்தது?

ஒரு கணிணி (laptop எப்படி சொல்வது), digital camera வாங்கினேன்.

என் நண்பன் நவநீ அமெரிக்காவிலிருந்து இந்தியா போய், மீண்டும் அமெரிக்கா வந்து விட்டான்.

என்னோடு 12265 2B யில் தங்கி இருந்த பாப்பு இந்தியா சென்று விட்டார்.

நான் ஒரு நிஸான் அல்டிமா வாங்கினேன். அமெரிக்காவில் ஓட்டுனர் உரிமம் கிடைத்து நன்றாக வண்டி செலுத்த கற்றுக் கொண்டேன்.

என்னுடன் கல்லூரியில் படித்த பாதி நண்பர்கள் அமெரிக்காவில் இருக்கின்றனர். அதில் இராஜாராம், நித்யா மற்றும் விஸ்வா போன்றவர்களை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.
என்னுடைய நண்பர்கள் நிறைய பேருக்கு கல்யாணம் நடந்தது அல்லது கல்யாணம் உறுதியானது. அவ்வளவு வயதாகி விட்டது :)


ஆர்குட் நன்கு பரிச்சயமானது. என்னுடைய ஆதர்ஷ் பள்ளி நண்பர்கள் நிறைய பேருடன் மீண்டும் தொடர்பு ஏற்பட்டது. குறிப்பிடத்தகுந்த பிற ஆர்குட் நண்பர்கள் : மிர்ச்சி சுசி, ஓ பக்கங்கள் ஞாநி..

நிறைய தோல்விகள் கிட்டியது. கடைசியாக கிடைத்தது, appraisal (தமிழ் வார்த்தை தெரியவில்லை) குறைந்தது. தோல்விகளில் இருந்து நிறைய தெரிந்து கொண்டேன். துன்பங்கள் வரும் போது தான், உண்மையான் நண்பர்கள் யார் என்று தெரிந்து கொள்ள முடிகிறது. ஆதலால் துன்பங்களும் நன்றே!! மேலும், பழைய நண்பர்கள் போனாலும் புதிய நண்பர்கள் கிடைத்தார்கள். :)

பார்த்துக் கற்றுக் கொண்டதை விட, அனுபவித்து நிறையவே கற்றேன். மனிதர்களை நன்றாக புரிந்து கொள்ளும் சந்தர்ப்பங்கள் நிறையவே கிடைத்தது. நூல்களில் படிப்பதை வாழ்க்கையில் அப்படியே செயல்படுத்துவது எவ்வளவு கடினம் என்பதை மிகத் தெளிவாக புரிந்தது.

அதோடு இன்னொன்றும் நன்றாகத் தெரிந்து கொண்டேன். துன்பங்கள் வரும் போது, அதைச் சரி பண்ணும் வழிகளும் எளிதாகத் தெரியத் தான் செய்கிறது. நமக்கு தேவையெல்லாம், துன்பங்களை எதிர் கொள்ளும் துணிவு தான். அதை அதிகரிக்க முயலுகிறேன்..

வரும் ஆகஸ்ட் மாதம் மீண்டும் இந்தியா செல்கிறேன். :)

மீண்டும் சென்னை, வேளச்சேரி...பார்ப்போம், அடுத்த வருடம் இந்தியா என்ன கற்றுத் தருகிறது என்று?

Monday, June 25, 2007

சிவாஜி.....

மீண்டும் சிகாகோ சென்றேன் இரஜினியின் சிவாஜி பார்க்க !! படம் எனக்கு பிடித்து இருந்தது. 'அதிரடிக்காரன்' பாட்டு அட்டகாசம்... இரஜினி பஜ்ஜி சாப்பிட்டுக் கொண்டே சுமனிடம் பேசும் காட்சி அதிரடி... இது போன்று பல காட்சிகள் எனக்கு மிகவும் பிடித்தது.. சில logical (லாஜிக்கல் - இதற்கான தமிழ் வார்த்தை தெரிவில்லை) பேத்தல்கள் இருந்தன. ஆனால் அது இப்பொழுது எல்லா திரைப்படங்களிலும் இருக்கிறது. இரஜினி - ஷங்கர் படம் மட்டும் என்ன விதிவிலக்கா?

படத்தில் இரஜினியின் முயற்சிகளை முறியடித்து விட்டு, சுமன் சிரித்து கொண்டே இரஜினியிடம் பேசுவது போல் ஒரு காட்சி இருக்கிறது. எல்லா வில்லத்தனங்களையும் செய்து விட்டு இரஜினிக்கு உதவி ஏதாவது வேண்டுமா என்று சுமன் கேட்பது போல் அந்த காட்சி அமைக்கப்பட்டிருக்கும். அப்பொழுது இரஜினி கோபப்பட்டு 'உனக்கு எல்லாம் நல்ல சாவே வராது டா' என்று கூறுவார்..

இதைப் போன்ற காட்சிகள் இதற்கு முன்னரே பல படங்களில் வந்து இருந்தாலும், அப்பொழுதெல்லாம் எனக்கு அக்காட்சிகளின் அழுத்தம் வெகுவாக புரியவில்லை.

ஆனால், இப்பொழுது என் தனிப்பட்ட வாழ்க்கையில் நான் இதைப் போன்ற அனுபவங்கள் நிறைய சந்தித்து விட்டதால், அந்த காட்சியின் அழுத்தம் நன்றாகவே புரிந்தது. ஏன் இரஜினிக்கு அவ்வளவு கோபம் வருகிறது என்பது எனக்கு எளிதாகவே உணர முடிந்தது. ஒரு மனிதனுக்கு நியாயமாக கிடைக்க வேண்டியதை மீண்டும் மீண்டும் தடுத்தால், அவன் தனது நேர்மையான பாதையில் தவறுவது மிகவும் எளிதாகிறது.

படத்திலும் இரஜினி அதையே செய்கிறார். அவ்வாறு செயல்கள் புரிந்து வெற்றி காண்பதாக இயக்குனர் காண்பிக்கிறார். ஆனால் உண்மையான வாழ்க்கையில் அதுவும் முடியாது.

ஆதலால், மக்கள் பொதுவாகவே இதைப் புரிந்து கொண்டு, எதைப் பற்றியும் கவலைப்படாமல், தங்கள் வாழ்வு செழிக்க என்ன தேவையோ அதைச் செய்து கொண்டு வாழப் பழகிக் கொண்டனர். இதைத் தான் பலர் சுயநலம் என்றுக் கூறுகின்றனர். ஆனால், மக்களுக்கு வேறு என்ன தான் வழி இருக்கிறது?

உங்களுக்கு ஏதேனும் தெரிகிறதா?

Tuesday, March 13, 2007

Living Style - Books are contradicting...

Like my previous blogs, i wanted to write this also in tamil. But i intended my friend devraj should also read this as i got the idea of writing this blog from him. So, in English....(Devraj is a bengali and he doesn't know to read tamil though he speaks :) )

A few days before, Devraj was talking with me about a book he read.

Name : 48 Laws of Power
Author : Robert Greene

He was telling me about some of the laws / ways that the author has told / guided people for their success in life. i was really surprised abt some of the laws the author has told. One of the laws say

"Never put too much trust in friends, learn how to use enemies"

The second part seems to be ok (not with full heart).. anyways..but see the first part.. if we dont trust a guy, then how can i call him as my friend? i dont see any logic in the first part of the sentence. may be he talks about the amount of trust. But how do we measure that..is a 15 cm scale enough:).

Basically, India is a country in which friendship is seen even between ppl who are doing injustice also. i mean Karna and Duriyodhana. Though duriyodhana was wrong and even karna knows it, and the biggest thing comes here..karna even knows he will be fighting against his own brothers if he is on the duriyodhana's side. then too, because of friendship, he stays in the side of duriyodhana and dies for him also. if at all, the law told in the book has been published in that age, i dont think there would have been these sort of illustrations of friendship etc. not only friendship, for any other relationship. it wouldn't take much time for spreading this concept for other relationships also. Then, finally there would have been no belief / love between parents and children, brother and sister..

Similarly there were two / three laws which contradicted the ways that have been told in indian books. Tell me one thing guys..Do you think Success is the only thing that we need in life? And for that if we are going to lose the credibility in our relationships, is that fine?

Earlier, ppl used to say only western dressing culture, music is migrating towards india. Now, slowly the cultures, idealogies etc is also migrating to india from west.. i would say these opinions are the ones which has increased divorce of couples, increase in population of parents in old homes, deceiving friends etc..

Some people may say, this is your opinion and that is the author's opinion..may be..but which is right?
U DECIDE..
Do you want to live in a world where u have credible friends, parental love, brotherly affection, Nephew / Niece's Smile etc.. and win the world together?
or
a world where u will succeed but no one you can trust and just your success is with you..Then is it a real success?